இரத்தினபுரம் (இலங்கை)

இரத்தினபுரம் என்பது இலங்கையின் வடக்கில் கிளிநொச்சி நகரத்தின் அருகில் உள்ள ஒரு கிராமம். இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பக்கமாக திருவையாறுக்கும் ஆனந்தபுரத்திற்கும் இடையில் இருக்கிறது. ஆறுகள் நிறைந்த குளிர்ச்சியான கிராமம் இரத்தினபுரம்.

இந்த நிலப்பகுதியை விட்டு மக்களை எழுந்து செல்லுமாறு அரச அதிகாரிகள் பணித்துள்ளனர். இதனால் இந்தக் கிராம மக்களுக்கு வீட்டுத் திட்டம் போன்ற நிவாரணங்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை. தமது நிலம் தமக்குத் தேவை என்று மக்கள் கோரியதை அடுத்து இந்தக் காணி நிலம் மக்களுக்கு உரியவை என்றும் அவற்றை விட்டு பெயர்க்க மாட்டோம் எனவும் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தினபுரம்_(இலங்கை)&oldid=3593364" இலிருந்து மீள்விக்கப்பட்டது