இருதயாலீஸ்வரர் கோவில்
இருதயாலீஸ்வரர் கோவில்
திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்தில் உள்ள திருநின்றவூர் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாயலமாகும்.இத்தலத்தின் மூலவர் இருதயாலீஸ்வரர், தாயார் மரகதாம்பிகை.[1]
பெரிய பு ராணம் பாடல் பெற்ற திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில் |
அமைவிடம் | |
ஊர்: | திருநின்றவூர் |
மாவட்டம்: | திருவள்ளூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | இருதயாலீஸ்வரர் |
தாயார்: | மரகதாம்பிகை |
தல விருட்சம்: | இலுப்பை |
சிறப்பு திருவிழாக்கள்: | பஞ்சமூர்த்தி புறப்பாடு ஆரூத்ரா |
பாடல் | |
பாடல் வகை: | பெரிய பு ராணம் |
பாடியவர்கள்: | சேக்கிழார் |
வரலாறு | |
தொன்மை: | புராதனக் கோயில் |
நிறுவிய நாள்: | 7 ஆம் நூற்றாண்டு |
திருவிழாக்கள் தொகு
மகாசிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், மகாசங்கராந்தி, வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை, சித்திரை ஆண்டுப் பிறப்பு, பௌர்ணமி, அமாவாசை, பிரதோசம், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை.
தலச் சிறப்பு தொகு
சிவனின் மூலஸ்தானத்தில் பூசலார் நாயனாரின் சிலை உள்ளது.
கோவிலின் அமைப்பு தொகு
- சுவாமி கிழக்கு நோக்கி உள்ளார்.
- அம்மன் தெற்கு நோக்கி உள்ளார்.
- இருவருக்கும் தனிதனி சன்னதிகள் உள்ளது.
- சுவாமியின் விமானம் கஜபிஷ்டம் அமைப்பில் தூங்கானை மாடவடிவில் அமைந்துள்ளது.
- சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி, நடராஜர், நந்தி தேவர், சண்டிகேசவர் சன்னதிகள் உள்ளன.
வேண்டுதல் தொகு
இருதய நோய் குணமாக வேண்டி இங்கு வேண்தல் செய்கின்றனர். [2]
பெரிய புராணத்தில் இடம்பெற்ற பாடல் தொகு
- நீண்ட செஞ் சடையனார்க்கு நினைப்பினால் கோயிலாக்கி
- பூண்ட அன்பு இடையறாத பூசலார் பொற்றாள் போற்றி
- நின்றவூர் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த
- நன்றுநீ டாலயத்து நாளை நாம் புகுவோம் நீயிங்(கு)
- ஒன்றிய செயலை நாளை யொழிந்துபின் கொளவாயென்று
- கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில் கொண்டருளப் போந்தார்[3]
-சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம்