இரேவணசித்தர்

இரேவணசித்தர் (16 நூற், பேரளம்) ஒரு தமிழ்ப் புலவர். இவரே அகர வரிசையில் தொகுக்கப்பட்ட முதல் நிகண்டு நூலான அகராதி நிகண்டைத் தொகுத்தவர். இவர் சிவஞான தீபம், பட்டீச்சுர புராணம் ஆகிய நூல்களையும் எழுதினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேவணசித்தர்&oldid=3853043" இலிருந்து மீள்விக்கப்பட்டது