உதாத்தவணி அல்லது உதாத்த அணி என்பது செல்வ மிகுதியையும் மேம்பட்ட உள்ளத்தின் மிகுதியையும் வியந்து கூறுவது எனப்படும்.

குறிப்பு தொகு

"வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும்
உயர்ச்சிபுனைந் துரைப்ப(து) உதாத்த மாகும்." என்கிறது தண்டியலங்காரம் 52-ஆவது பாடல்.

வகைகள் தொகு

உதாத்தவணி பின்குறிப்பிட்டவாறு இருவகைப்படும்:

  1. செல்வ மிகுதியைக்கூறுவது "செல்வமிகுதி உதாத்தவணி"
  2. உள்ளத்தின் உயர்வினை வியந்து கூறுவது "உள்ள மிகுதி உதாத்தவணி"

வேறு பெயர்கள் தொகு

உள்ள மிகுதி உதாத்தவணியினை வீறுகோளணி என்றும் அழைப்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதாத்தவணி&oldid=3307751" இலிருந்து மீள்விக்கப்பட்டது