ஊக வணிகர் தொகு

பங்குச்சந்தையில் முதலீடுகளின் மதிப்பு அதிகரிப்பதலும், இலாபம் பெறுவதலும் நோக்கமாக இருக்கும் நபர்களுக்கு ஊகவணிகர் என்று பெயர். வாங்கி விற்பதன் மூலம் இலாபத்தை விரும்புவர்.பத்திரங்களின் உடமையை பெறுவதும் இல்லை.

ஊக வணிகர்களின் வகைகள் தொகு

காளை தொகு

பத்திரங்களை எதிர்காலத்தில் விலையேற்றம் பெறும் என எதிர்பார்க்கின்ற ஊக வணிகர். தெஜிவாலா என அழைக்கப்படுகின்றனர். "எல்லாம் நன்மைக்கே" என மனபாங்கு கொண்டவர் எதிர்காலத்தில் விலையில் பத்திரங்களை விற்க இயலும் என்ற எண்ணத்தில் தற்பொழுது பத்திரங்களை வாங்க முனைகிறார்.

கரடி தொகு

எதிர்காலத்தில் விலை வீழ்ச்சி அடையும் என்று எண்ணுகின்ற ஊக வணிகர் கரடி அல்லது "மண்டிவாலா"என அழைக்கப்படுகிறார். எதிலும் கெட்டதையே காண்கின்ற மனப்பாங்கு கொண்டவர் பத்திரங்கள் பின்னர் குறைந்த விலையில் வாங்கி கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தற்பொழுது பத்திரங்களை விற்கிறார்.

கலைமான் தொகு

முன்னெச்செரிக்கை உடையவர் இவர் முனைமத்தில் நிறுமத்தின் பங்குகள் விற்கப்படும் என்று அறிந்தவுடன் புதிய விடுப்புகளில் பங்கு கோரி விண்ணப்பம் செய்வார். தனக்கு ஒதுக்கீடு செய்தால் முனைமம் பெற்றவுடன் விற்றுவிடுவார். இவர் "முனைம வேட்டையாளர்"என அழைக்கப்படுவர்.

முடவாத்து தொகு

தற்போதைய தம் நடவடிக்கைகளில் உள்ள இடர்பாடுகளை தீர்ப்பதில் போராடி கொண்டிருக்கிற கரடி ஊக வணிகரே முடவாத்து என அழைக்கப்படுகிறார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊக_வணிகர்&oldid=3594922" இலிருந்து மீள்விக்கப்பட்டது