எட்வர்ட் குட்சாத்

இந்திய பழங்குடி தலைவர்

எட்வர்ட் குட்சாத் (Edward Kutchat) என்பவர் இந்தியப் பழங்குடித் தலைவர்[1] மற்றும் கார் நிகோபார் தீவின் பழங்குடி குழுவின் தலைவராக இருந்தவர் ஆவார். கார் நிக்கோபார் தீவில் வானூர்தி நிலைய விரிவுபாட்டிற்காகத் தனது நிலத்தை இந்திய அரசாங்கத்திடம் வழங்கி ஒத்துழைத்ததற்காக இவர் நன்கு அறியப்பட்டு ஊடகங்களில் இடம்பெற்றார்.[2] ஜவகர்லால் நேரு இத்தீவிற்கு வந்த போது இவருக்கு தன்னுடைய கச்சுடையினை வழங்கி பெருமைப்படுத்தினார். இவர் நிக்கோபார் மக்களின் வணிகத்தை மேம்படுத்துவதற்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.[3] இந்திய அரசாங்கம் 1989-ல் இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[4]

எட்வர்ட் குட்சாத்
Edward Kutchat
பிறப்புஅந்தமான் நிக்கோபார் தீவுகள், இந்தியா
பணிபழங்குடி தலைவர்
விருதுகள்பத்மசிறீ

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Kingdom For a Jacket". Little India. 16 October 2011. Archived from the original on 4 October 2015. பார்க்கப்பட்ட நாள் September 1, 2015.
  2. "Nehru got land for his jacket". Andhra Telangana Vishesh. 5 September 2011. பார்க்கப்பட்ட நாள் September 1, 2015.
  3. "History of Jadwets". Jadwet Trading Company. 2015. பார்க்கப்பட்ட நாள் September 1, 2015.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on October 15, 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.

மேலும் படிக்க தொகு

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வர்ட்_குட்சாத்&oldid=3789168" இலிருந்து மீள்விக்கப்பட்டது