எலிசபெத் ஆண்டர்சன் சியரா

எலிசபெத் ஆண்டர்சன் சியரா என்பவர் புகழ்பெற்ற தாய்ப்பால் கொடையாளி ஆவார். இவர் அதீத தாய்ப்பாலை கொடையாக தந்தமைக்காக அறியப்படுகிறார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓரிகன் மாநிலத்தில் வசிக்கிறார். இவரை தாய்ப்பால் தெய்வம் என அழைக்கின்றனர். [1]

எலிசபெத் ஆண்டர்சன் சியரா
மற்ற பெயர்கள்தாய்ப்பாலுக்கான இறைவி
அறியப்படுவதுதாய்பால் கொடையாளி
வாழ்க்கைத்
துணை
டேவிட் சியரா
பிள்ளைகள்இசபெல்லா, சோபியா

2014 ஆம் ஆண்டில், அவர் ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் நோயால் கண்டறியப்பட்டார். இந்த நோய்க்குறியின் காரணமாக அவர் ஒரு நாளைக்கு சுமார் 6.65 லி (225 US fl oz; 1.76 US gal), தாய்ப்பாலை உற்பத்தி செய்தார். இந்த அளவானது சராசரி தாயை விட கிட்டத்தட்ட 8 முதல் 10 மடங்கு அதிகமாகும்.[2] அதிகபடியாக உற்பத்தியாகும் தாய்ப்பாலை வீணாக்காமல் கொடையாக தர முன்வந்தார் எலிசபெத் ஆண்டர்சன் சியரா. 250 குழந்தைகளுக்கும், தோராயமாக 2,300 லி (600 US gal) தாய்ப்பாலையும் ஊட்டினார்.

ஆதாரங்கள் தொகு

  1. Paige, Amy (2019-11-07). "Mom With Hyperlactation Donates 600 Gallons Of Breast Milk In 2 Years, Pumping 5 Hours Per Day". LittleThings.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-10.
  2. "Woman produces too much breast milk, donates excess". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2017-08-01. பார்க்கப்பட்ட நாள் 2019-12-10.

வெளி இணைப்புகள் தொகு

முகநூல் பக்கம்