ஐங்குறுநூறு - குறிஞ்சி

ஐங்குறுநூறு என்னும் நூல் பாட்டும் தொகையுமாகிய சங்கப் பாடல்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசையில் ஐந்திணைப் பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திணையிலும் 100 பாடல்கள் உள்ளன. அவை சிறுசிறு ஆசிரியப் பாக்களின் அடுக்குகளாக உள்ளன. ஒவ்வொரு திணையிலும் 10 பாக்களைக் கொண்ட 10 அடுக்குகள் உள்ளன. ஒவ்வொரு திணையிலுமுள்ள 100 பாடல்களையும் ஒரே புலவர் பாடியுள்ளார். இந்த நூலின் குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர் கபிலர்.

இந்நூலிலுள்ள 10 பத்துகள்
  • 1 அன்னாய் வாழிப் பத்து
  • 2. அன்னாய்ப் பத்து
  • 3 அம்ம வாழிப் பத்து
  • 4 தெய்யோப் பத்து
  • 5 வெறிப் பத்து
  • 6 குன்றக் குறவன் பத்து
  • 7 கேழற் பத்து
  • 8 குரக்குப் பத்து
  • 9 கிள்ளைப் பத்து
  • 10 மஞ்ஞைப் பத்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐங்குறுநூறு_-_குறிஞ்சி&oldid=3296730" இலிருந்து மீள்விக்கப்பட்டது