ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோயில்

ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் என்பது நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இக்கோயிலில் திருவிழாவின் போது தூக்குதேர் தூக்கப்படுகிறது. [1]

பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் குதிரை வாகனம்

மூலவராக பிடாரி செல்லாண்டியம்மனும், பரிவாரத் தெய்வங்களாக கருப்புசாமி, கன்னிமார், இசக்கி போன்றோரும் இக்கோயிலில் உள்ளனர். தேரோட்ட திருவிழா மாசிமகத்தினை ஒட்டி நடைபெறுகிறது. இத்திருவிழா 15 நாட்கள் நடைபெறுகிறது. மார்கழி மாதம் வேல் திருவிழா நடக்கிறது.

ஆதாரங்கள் தொகு

  1. ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் தூக்குத்தேர் முறிந்து ஒருவர் பலி: 3 பேர் காயம்

வெளி இணைப்புகள் தொகு