ஓமாந்தூர் பெரிய கோவில் வரலாறு (நூல்)

ஓமாந்தூர் பெரிய கோவில் வரலாறு எனும் நூல் ஜோதிடர் இ கணேசன் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலில் ஓமாந்தூரில் அமைந்துள்ள ஏகாம்பரேசுவர் கோயில் எனும் பெரிய கோவிலின் வரலாறு, மாசி பெரியசாமி கோயிலின் வரலாறு, அன்னகாமாட்சியம்மன் கோயில் வரலாறு என பல கோயில்களின் வரலாறுகள் விவரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாசி பெரியசாமியின் உடுக்கையடிப்பாடல், துக்க நிவராண அஷ்டகம் ஆகியவையும் உள்ளன.