கண்ணீர் சிந்தும் சொர்க்கபுரி (நூல்)

கண்ணீர் சிந்தும் சொர்க்கபுரி என்னும் நூல், ராவய பத்திரிகையின் ஆசிரியரான விக்ரர் ஐவன் அவர்களால் எழுதப்பட்ட நூல் ஆகும். சேர்மனி நாட்டின் நிதியுதவியுடனும், இலங்கை சகவாழ்வு மன்றத்தின் அனுசரணையுடனும் இது 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இனக்கலவரத்தின் வரலாற்று ரீதியான கூர்ப்பினை மிகவும் காத்திரமான காட்டுவதாகவும், இன நெருக்கடியுடன் தொடர்புபட்ட சம்பவங்களை பகைப்படங்களினூடாக விளக்குவதுமான வகையில் இந்நூல் 190 வருடங்களுக்கு மேலான காலப்பகுதியைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

கண்ணீர் சிந்தும் சொர்க்கபுரி ஆங்கிலப்பதிப்பு.

இந்நூல் Paradise in Tears எனும் பெயரில் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு சமகாலத்தில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழ் மொழிபெயர்ப்பை சேந்தன் செல்வராசா, எஸ். கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.