கந்தர்மடம் சிறீ சித்தி விநாயகர் ஆலயம்

கந்தர்மடம் சித்தி விநாயகர் ஆலயம் என்பது இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாண நகரிலே கந்தர்மடம் என்னும் இடத்தில் உள்ள பழம் வீதியில் அமைந்துள்ள ஒரு விநாயகர் ஆலயம் ஆகும். பல காலங்களாக இங்கு வைத்துப் பூசைகள் பல செய்து பேணப்பட்டு வருகின்றது. இக்கோயிலின் பூசகரான விஜேந்திர சர்மா அவர்களே இக்கோயிலை பேணி வருகிறார். இங்கு பரிவார தெய்வங்களாக வைரவர், சிவன், பார்வதி, முருகன் ஆகியவற்றையும் அமைத்துள்ளனர்.