கலைச்சொல் (இதழ்)

கலைச்சொல் 1980 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் கோவலங்கண்ணன் ஆவார். இது புதியன கண்டறியும் காலமாற்றத்திற்கு ஏற்றவாறு தெளிதமிழில் சொல்வளம் பெருக்கினால் நம்மொழி வளரும் என்பதறிந்து தமிழ்க் கலைச்சொற்களைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

தமிழில் 1916 ஆம் ஆண்டு 'தி சர்னல் ஆப் சயின்டிபிக் டெர்மினாலாஜி என்ற இதழை சேலம் வேங்கட சுப்பையரும், இராஜாஜியும் இணைந்து நடத்தினர்.

உசாத்துணைகள் தொகு

  • நாள் ஒரு நூல்
  • தமிழில் அறிவியல் இதழ்கள் இரா.பாவேந்தன், சாமுவேல் பிஷ்கிறின் பதிப்பகம், கோயம்புத்தூர், 1998
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைச்சொல்_(இதழ்)&oldid=3392685" இலிருந்து மீள்விக்கப்பட்டது