களம்பாட்டு

களம்பாட்டு அல்லது களமெழுத்து அல்லது களமெழுத்துப்பாட்டு என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிகழ்த்தப்படும் ஒரு பாரம்பரிய கலை நிகழ்ச்சியாகும்.[1]இது ஒருவழிபாடாகச் செய்யப்படுகிறது. 'குருப்' எனப்படும் ஒரு பாரம்பரிய சமூகத்தைச் சேர்ந்தவர் களம்பாட்டு வழிபாட்டிற்கான பொறுப்பாளராக உள்ளார். பத்ரகாளி, அய்யப்பன், வேட்டக்கோருமகன், நாகக் கடவுள் போன்ற கடவுள்களின் ஆசீர்வாதங்களுக்காக இவ்வழிபாடு செய்யப்படுகிறது.[2] குருப்பானவர் களம் எனப்படும் தரையில் வழைபடப்பட்வுள்ள கடவுளின் மீதான பாடல்களைப் பாடிக்கொண்டே அக்கடவுளின் படத்தை ஐந்து வண்ணங்களைப் பயன்படுத்தி வரைவார்.[3] வெளிச்சப்பாடு அல்லது கொமாரம் என்றழைக்கப்படும் (நம்பூதிரி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இதற்கான தூதராக இருப்பார். [4] ஐந்து முதல் 15 நபர் வரையில் ஒரு குழுவாக கடவுளின் மீது பாடல்களைப் பாடுவர். இது சுமார் 600 வருடங்கள் பாரம்பரியமிக்கதாகும்.

களம்பாட்டு

பெயர்க்காரணம் தொகு

களம் என்பது படத்தைக்குறிக்கும். எழுத்து என்பது வரைதலையும், பாட்டு என்பது பாடுதலையும் குறிப்பது.[5] படத்தை வரைந்து கொண்டே பாடுவது களமெழுத்துப்பாட்டு என்று அழைக்கப்படுகிறது. களம் என்பது வளத்தையும் குறிக்கிறது.

பகுதிகள் தொகு

களமெழுத்துச் சடங்கு மூன்று நிலைகளில் உருவாகிறது - களமெழுத்து-படத்தை வரைதல், களம்பாட்டு- தெய்வம் தொடர்பான புராணங்களை சில பாரம்பரிய கருவிகளின் துணையுடன் பாடுதல், நிகழ்வு நிகழ்த்தப்படும் இறுதிக் கட்டமான களம் துள்ளல்- களத்தை அழித்தல் ஆகியன அந்த மூன்று நிலைகளாகும்.[6] இந்த கலை வடிவம் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது, இது மத, அழகியல் மற்றும் சமூக அம்சங்களைக் கொண்டுள்ளது. உச்சப்பாட்டு, கலப்பிரதிக்ஷினம் (வெவ்வேறு படிகள் மற்றும் தாளங்களுடன் களதை சுற்றி வருதல்), நாளிகேரமேரு (தேங்காயை பிரசாதமாக உடைத்தல்), மற்றும் களமாய்க்கல் (வழிபாட்டினை முடித்தல்) ஆகியன இதன் பகுதிகளாகும்.

பாட்டு கூரையிடல் தொகு

பாட்டுக்கூரையிடல் என்பது நிகழ்வின் தொடக்கம் ஆகும். வழங்குநரின் ஆலோசனையுடன் குருப் மண்டபம் அல்லது பாட்டுப்புரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையை அலங்கரிப்பதன் மூலம் இந்த நிகழ்வினைத் தொடங்குகிறார். பாட்டுக் கூரையிடல் என்பது வழிபாட்டிற்கேற்ற சிவப்பு விதானத்தை உருவாக்குவதாகும். இதுவே களம்பாட்டுவின் அதிகாரப்பூர்வ தொடக்கமாகும். சுத்தம் செய்யப்பட்ட பட்டரங்கின் மையத்தில் ஒரு பீடம் (முக்காலி) வைக்கப்படுகிறது. சிவப்புநிறப் பட்டுவிரித்து அதில் வாழையிலை வைக்கப்படுகிறது. அதில் இரன்டரை நாழி அரிசி மீது தேங்காய் அடுக்கி வைக்கப்படுகிறது. அதற்கு மேலே வாழைக்கன்று, வெற்றிலைப்பாக்கு, நெல், அவுல், மலர்கள், வெல்லம், வாழைப்பழம், தேங்காய் ஆகியவை வழிபாட்டிற்காக வைக்கப்படுகிறது. இதன்பிறகு குருப்பானவர் கூரையிடலைச் செய்கிறார். களம்பாட்டு காலை மாலை ஆகிய இரு வேளைகளில் செய்யப்படும் வழிபாடாகும். சில நேரங்களில் அதே மண்டபத்தில் தொடர்ச்சியான பாட்டு நிகழ்வுகள் இருக்கலாம். எனவே கூரை அல்லது அலங்காரம் தொடர் நிகழ்வுகள் முடிந்தபிறகு மட்டுமே அகற்றப்படும். உதாரணமாக, நிலம்பூர் பாட்டு 41 நாட்களில் முடியும்

உச்சப்பாட்டு தொகு

களம்பட்டிற்கான ஓவியம் வரைதல் உச்சப்பாட்டு என்ற சடங்கோடு தொடங்குகின்றன.சந்தியாவேளையின் போது குருப் களத்தைத் தயாரிப்பார். அவர் தெய்வத்தின் வழக்கமான படத்தை வெள்ளை, மஞ்சள், கருப்பு, பச்சை மற்றும் சிவப்பு ஆகிய ஐந்து வண்ணங்களுடன் உருவாக்குகிறார். களம் தயாரானதும் கொமாரம் என்றழைக்கப்படுபவர் களத்திற்கு பாடல்களுடன் தெய்வத்தை அல்லது வாளினை ஊர்வலமாக வரவேற்று எடுத்து வருவார். இங்கே வசதிக்கேற்ப யானை, மேளம் மற்றும் பிற அலங்கார பொருட்களையும் ஊர்வலத்தில் சேர்க்கலாம். செல்லக்கர, தொழுபடம், பானிக்குளம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த களம்பாட்டு குழுக்களில் கல்லாட்டு ஹரிதாஸ் குருப் அவர்களின் மகனான கல்லாட்டு அச்சுத குருப் இந்தத் துறையில் மிகவும் புகழ்பெற்ற கலைஞர்களில் ஒருவர். கூரையிடலுக்குப் பிறகு பிராமணப் பூசாரி ஒருவர் சூரிகா அல்லது சூரிகா எழுநாழிக்கல் எனப்படும் ஒரு வாளை ஸ்ரீகோவில் முதல் பாட்டரங்கு வரை கொண்டு வந்து பீடம் அருகே வைப்பார். இந்த வாள் எந்தத் தெய்வத்தை வழிபடுகின்றனரோ அதன் பிரதிநிதித்துவமாகக் கருதப்படுவதால், களம்பாட்டில் வாளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பிராமண பூசாரி கணபதிக்கும் சூரிக்காவுக்கு பூஜை செய்கிறார். அந்த நேரத்தில் பூஜைக்கிடையில் குருப் உச்சப்பாட்டுக்குத் தயாராக இருப்பார்.

களம் பூஜை தொகு

மண்டபத்தை அலங்கரித்தபின் கொமாரம் என்பவர் தெய்வ வாளினை ஊர்வலமாக எடுத்துவந்து, பூஜை நடக்கும் இடத்தை மூன்றுமுறை ஆடிக்கொண்டே சுற்றி வருவார். இது கலப்பிரதக்சனம் எனப்படுகிறது. மாறர் எனப்படும் சமூகத்தார் கொமாரத்தின் ஆடலுக்கேறப செண்டை மேளம் இசைப்பர். இது ஈடும் கூரும் எனப்படுகிறது.[7] அந்த இடத்தில் தெய்வத்திற்கான ஒரு பூஜை தந்திரி என்றழைக்கப்படும் பிராமினரால் செய்யப்படுகிறது மேலும் அந்த பூஜையானது அந்த நாளின் களம்பாட்டியின் கடைசி கட்டத்தில் மட்டுமே முடிவடையும் வழிபாடு தொடங்கும் அந்த தருணத்திலிருந்து மண்டபத்தில் தெய்வம் இருப்பதாகக் கருதப்படுகிறது. வழிபாட்டின் பொழுது குருப் தொட்டம் எனப்படும் பக்திப் பாடல்களைப் பாடுகிறார் (ஒவ்வொரு கட்டத்திலும் பாட வழக்கமான பாடல்கள் உள்ளன) முடிவில் உழிச்சில் எனப்படும் பாடல்வகையோடு முடிக்கப்படுகிறது.

சந்தியா வேளை தொகு

தீப ஆராதனை, கெலி எனப்படும் மேள ஆராதனை, தயம்பகா, குஷாலிப்பாட்டு போன்ற நிகழ்வுகள் சந்தியா வெளையின் பொழுது நிகழ்த்தப்படும். வழிபாடு முடிந்த பின்னர், நிகழ்வை ஏற்பாடு செய்தவரின் பொருள்வசதிக்கேற்ப இது ஏற்பாடு செய்யப்படும். ஸ்ரீ பத்ரகாளி, கரியம் கலிமூர்த்தி தேவி ஆகியோருக்கு கேரளாவின் அடூர், மலமேக்கரை, பத்தனம்திட்டா ஆகிய ஊர்களில் பாரம்பரியமாக இது நடத்தப்படுகிறது. சந்தியாவேளையின் போது குருப் களத்தைத் தயாரிப்பார். அவர் தெய்வத்தின் வழக்கமான படத்தை வெள்ளை, மஞ்சள், கருப்பு, பச்சை மற்றும் சிவப்பு ஆகிய ஐந்து வண்ணங்களுடன் உருவாக்குகிறார். களம் தயாரானதும் கொமாரம் என்றழைக்கப்படுபவர் களத்திற்கு பாடல்களுடன் தெய்வத்தை அல்லது வாளினை ஊர்வலமாக வரவேற்று எடுத்து வருவார். இங்கே வசதிக்கேற்ப யானை, மேளம் மற்றும் பிற அலங்கார பொருட்களையும் ஊர்வலத்தில் சேர்க்கலாம். செல்லக்கர, தொழுபடம், பானிக்குளம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த களம்பாட்டு குழுக்கள் இதனை வழக்கமாகச் செய்துவருகின்றன

முல்லக்கள் பாடு தொகு

கோமரம் களம் மாய்க்கல் என்ற நிகழிவினைத் தொடங்கும் முன், கோமரம் (நடனக் கலைஞர், தெய்வத்தின் பிரதிநிதியாகக் கருதப்படுபவர்), குருப், மாறர், உரிமையாளர் மற்றும் பிற பக்தர்கள் உள்ளிட்ட குழு முல்லக்கள் பாடு என்ற வெளிப்புற செயல்முறைக்கு வெளியே செல்கிறது. தெய்வம் தனது பக்தர்களைப் பார்க்க வெளியே சென்று பின்னர் வேட்டையாடுகிறது என்று நம்பப்படுகிறது. புனிதப்படுத்தப்பட்ட வாளை வழிபடுமிடத்திலிருந்து எடுத்துச் செல்வதும் பின்பு வழிபடும் களத்திற்கு எடுத்துச் செல்வதும், அதைத் தொடர்ந்து உச்சப்பாட்டின் நிகழ்வுகளை ஓரளவு மீண்டும் செய்வதும் இந்த செயல்முறையில் அடங்கும். இதற்குப் பிறகு, பூசாரி கோமாராமுக்கு கடுத்திலாவை (வெட்டக்கொருமகனின் ஆயுதம்) கொடுக்கிறார், முழுக்குழுவும் மீண்டும் மேளம்தாளங்களுடம் பாட்டுப்புரத்திற்குத் திரும்புகிறது.[8]

களம் மாய்க்கல் தொகு

கோமரம் தெய்வப்பிரதிநிதியான வாளினைப் பயன்படுத்தி செண்டை மேளத்திற்கேப துடிப்புடன் நடனமாடிக்கொண்டே பாட்டரங்கத்தில் உள்ள தேங்காய்களை வெட்டுகிறார். இந்த நிகழ்வு களம் மாய்க்கல் என்று அழைக்கப்படுகிறது குறிப்பிடப்படும் தெய்வமானது வேட்டையின் போது காட்டு விலங்குகளைக் கொல்வதை இது குறிக்கிறது. இந்த நிகழ்வின் போது, குருப் மற்றொருவகைத் தொட்டம் பாடுகிறார். வேட்டைக்குப் பிறகு ஓய்வெடுக்க, தகம் தீர, வெட்டக்கொருமகன் தேங்காய் தண்ணீரை குடிப்பார் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு, தெங்கா எரியலின் (தேங்காய்களை உடைத்தல்) சடங்கு செய்யப்படுகிறது. நாளிகேர மேரு எனப்படும் தேங்காய் உடைத்தல் என்பது பெண் தெய்வங்கள் தவிர களம்பாட்டில் செய்யப்படும் ஒரு முக்கியமான செயல்பாடாகும். இதில் குறைந்தது மூன்று தேங்காய் உடைக்கப்படுகிறது, ஆனால் இந்த எண்ணிக்கை சிறப்பு நிகழ்வுகளில் 12,000 வரை செல்கிறது. தேங்காய்களை உடைத்த பிறகு, கோமரம் மீதமுள்ள களத்தை அழித்து, இறுதியாக, பக்தர்களை ஆசீர்வதிக்கிறார். பின்னர் அவர் களம் தூளைப் பிரசாதமாக விநியோகிக்கிறார். கடைசி சடங்கு கூரா வலிக்கல், இதில் குருப் பாட்டுமண்டபத்திலிருந்து கூரையை அகற்றி உரிமையாளரிடம் திருப்பித் தருகிறார். இது சடங்குகளின் முடிவைக் குறிக்கிறது. இதனை களம் மாய்க்கல் என்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. https://www.keralatourism.org/kerala-article/2012/kalamezhuthu/180
  2. https://www.thehindu.com/society/history-and-culture/kalamezhuthu-when-art-is-integral-to-ritual/article25622568.ece
  3. "Kerala Folk Music and Dance". eKerala Tourism. பார்க்கப்பட்ட நாள் 2010-12-14.
  4. "Kerala Folk Music and Dance". eKerala Tourism. பார்க்கப்பட்ட நாள் 2010-12-14."Kerala Folk Music and Dance". eKerala Tourism. Retrieved 14 December 2010.
  5. https://www.sahapedia.org/kalamezhuthu-pattu-of-kerala
  6. https://www.keralatourism.org/kerala-article/2012/kalamezhuthu/180
  7. https://www.sahapedia.org/kalamezhuthu-pattu-of-kerala
  8. https://www.sahapedia.org/kalamezhuthu-pattu-of-kerala

உசாத்துணை தொகு

  1. Chembra, Radhakrishnan. 2011. Kalamezhuthile Chithradarsanam (Malayalam). Thrissur: Lalitha Kala Academi.
  2. Jayaraj Padma. 2010. ‘Kalamezhuthu, a Ritual Performance’. Online at http://www.narthaki.com/info/articles/art280.html (viewed on September 23, 2015).
  3. Mundekkad, Babu. 2002. Kallatta Kuruppanmarude Kalamezhuthupattu (Malayalam). Kottayam: DC Books.
  4. Priya. Krishnadas. 2014. ‘Vettekaran Paattu’. Online at http://aswadanam.com/index.php/en/arts/89otherfolkartsmainpage/192vette… pattu?showall=1&limitstart= (viewed on September 27, 2015).
  5. Raman, Thiyadti. 2012. Ayyappan Theyattu (Malayalam). Cochin: DC Books.
  6. Sathyapal. 2013. Kalamezhuthu: Ritual Art Practice of Kerala. Trissur: Lalitha Kala Academi.
  7. UNESCO. 2016. ‘Identifying and Inventorying Intangible Cultural Heritage.’ Online at http://www.unesco.org/culture/ich/doc/src/01856-EN.pdf (viewed on April 7, 2016).
"https://ta.wikipedia.org/w/index.php?title=களம்பாட்டு&oldid=3166930" இலிருந்து மீள்விக்கப்பட்டது