கவறு

ஒரு சூதாட்டம்

கவறு என்பது ஒரு சூதாட்டம்.[1]

கவறு என்னும் சொல் கவலைகொள்ள வைப்பதைக் குறிக்கும். [2] சூதாடி இழந்த பொருளை மீட்கவேண்டும் எனக் கவலைக்கொள்ள வைப்பதால் இந்த விளையாட்டைக் கவறு என்றனர்.
நட்ட கவற்றினால் சூது இன்னா [3] என்னும் பாடலடிகளும் இதனைப் புலப்படுத்துகின்றன.
பிரியவிருக்கும் காதலனுக்கு அவன் காதலி வாழ்க்கை என்பது கவறுக்காய் போல ஏதோ ஒரு வாய்ப்பு என்று கூறுவதிலிருந்து இதனை உணர்ந்துகொள்ளலாம். [4]

இவற்றையும் பார்க்க தொகு

அடிக்குறிப்பு தொகு

  1.  
    பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா
    ஈரைம்பதின்மரும் போரெதிர்ந்து ஐவரொடு
    ஏதில ராகி இடைவிண்டார் ஆதலால்
    காதலொடு ஆடார் கவறு. – பழமொழி நானூறு 356

  2. பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற்றிணை 144
  3. இன்னா நாற்பது 26
  4. கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை – நற்றிணை 243
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவறு&oldid=3208435" இலிருந்து மீள்விக்கப்பட்டது