கானாடு பாண்டிய நாட்டில் திருமயம் ஊமையான் கோட்டை (ஊமைத்துரை கோட்டை) மைய்யமாக கொண்டு, தெற்கே கானாடுகாத்தான் முதல் வடக்கே வெள்ளாற்றின் தென்கரை வரையும் கிழக்கே பாழையூர் முதல் மேற்கே ராங்கியம் வரையும் அமைந்திருந்தது. இது இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள , திருமயம், மேலூர், பாழையூர், ராங்கியம், ராயவரம்,அரசாந்தம்பட்டி மற்றும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள கானாடுகாத்தான்,கோணப்பட்டு ஆகிய வட்டங்களின் இணைந்த நிலப்பரப்பாக இருந்தது. இதற்கடுத்து சோழ நாட்டின் உள்நாடான கோனாடு நாடு கவிநடு அமைந்திருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கானாடு&oldid=3596815" இலிருந்து மீள்விக்கப்பட்டது