கார்பிலமைன் விளைவு

கார்பிலமைன் விளைவு (ஆங்கிலம்: Carbylamine reaction) என்பது ஒரு வேதியியல் விளைவு ஆகும். முதல்நிலை அமைன்கள் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த விளைவு பயன்படுகிறது.

ஒரு முதல்நிலை அமைனுடன், குளோரோபார்ம் மற்றும் ஆல்க்ககால் கலந்த பொட்டாசியம் ஹைட்ராக்சைடு சேர்ந்தால் துர்நாற்ற வாடையுடைய ஐசோசயனைடுகள் தோன்றும். இந்த துர்நாற்ற வாடையைக் கொண்டு முதல்நிலை அமைன்கள் இருப்பதை உறுதி செய்யலாம். இதில் உருவாகும் ஐசோசயனைடுகளே கார்பிலமைன்கள் எனப்படும், இந்த விளைவே கார்பிலமைன் விளைவு ஆகும்.

The carbylamine reaction with ethyl amine

இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை அமைன்களுடன் இந்த விளைவு ஐசோசயனைடுகளை உருவாக்காது.

உதாரணங்கள் தொகு

மெத்தில் அமைனுடன் தொகு

CH3NH2 + CHCl3 + 3KOH → CH3-NC + 3KCl + 3H2O

அனிலீனுடன் தொகு

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பிலமைன்_விளைவு&oldid=2743687" இலிருந்து மீள்விக்கப்பட்டது