காளிகேசம் அருவி

காளிகேசம் அருவி தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் அருவியாகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது மேற்கு தொடர்ச்சி மலையின் நீருற்றுகளிலிருந்து பெருக்கெடுத்து வரும் ஆறு பூதப்பாண்டியிலிருந்து 15 கட்டை (கிலோ மீட்டர்) தொலைவில் அருவியாக பாய்கின்றது. இந்த ஆற்றில் கோடை காலத்திலும் தண்ணீர் வற்றுவதில்லை. இவ்வருவியின் அருகில் போட்டாணி குகை என்றழைக்கப்படும் குகை அமைந்துள்ளது. இதை தற்போது சுற்றுலா பயணிகள் சமையல் செய்ய பயன்படுத்துகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிகேசம்_அருவி&oldid=3629581" இலிருந்து மீள்விக்கப்பட்டது