குருசடி புனித அந்தோனியார் ஆலயம்

குருசடி புனித அந்தோனியார் ஆலயம் (Kurusady St. Antony's Church) 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் ஆகும். இது இந்தியாவின் தென்கோடி முனையில் நாகர்கோவிலுக்கு அருகில் உள்ளது. ஒரு இந்து நாடார் சிலுவை பொறிக்கப்பட்ட ஒரு கல்லைக் கண்டெடுத்ததாகவும், அவர் கனவில் ஒரு ஆலயம் கட்ட ஒளிவழியில் கட்டளையிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எளிய முறையில் இதன் வழிபாடு தொடங்கியது. அந்த இடம் குருசடி என்று அழைக்கப்பட்டது. குருசு என்பது சிலுவை என்று பொருள். 21 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு புதிய தேவாலயம் 1911 இல் கட்டப்பட்டது.

மேற்காேள்கள் தொகு