குர்பிரீத் சிங்

குர்பிரீத் சிங் (Gurpreet Singh) ஓர் இந்தியக் குறிவைத்துச் சுடும் விளையாட்டில் வல்லவர். இவர் இந்தியாவில் நடந்த 2010 பொதுநலவாயத்து விளையாட்டுகளில் குறிவைத்துச் சுடும் விளையாட்டுகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். இவர் 2010 அக்தோபர் 7 இல் விஜய குமாருடன் இணைந்து ஆடவர் 25 மீ காற்றுத் துப்பாக்கி இணையர் தங்கப் பதக்கத்தை வென்றார்.[1] அன்றே, இவரும் ஓம்கார் சிங்கும் ஆடவர் 10 மீ காற்றுத் துப்பாக்கி இணையர் தங்கப் பதக்கத்தை வென்றனர்.[2] தவிரவும் ஆடவர் 25 மீ விரைவுச்சூடு கைத்துப்பாக்கி (ஒற்றையர்) வகுப்பில் தனிநபருக்கான வெண்கலப் பதக்கமும் பெற்றார். இவர் இந்தியப் படையைச் சார்ந்தவர். இப்போது இந்தியப் படையில் பணிபுரிகிறார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்பிரீத்_சிங்&oldid=2693740" இலிருந்து மீள்விக்கப்பட்டது