குலங்கிழார்

குலங்கிழார் என்போர் கோயில் அர்ச்சகர்களாகிய சிவப்பிராமணர்கள் ஆவர்.

பல்லவர், பாண்டியர் காலம் தொகு

பல்லவர் ஆட்சியிலும், பாண்டியர் ஆட்சியிலும் கோயில் அர்ச்சகர்களாகிய சிவப்பிராமணர்கள் குலங்கிழார்கள் என்று அழைக்கப்பட்டனர். [1]

பொருள் தொகு

குலம் என்பது கோயிலைக் குறிக்கும். கிழார் தலைமையுடையவர், மேலானவர் என்ற பொருளைத் தரும். [1]

சிறப்பு தொகு

திருமால் கோயில் அர்ச்சகர்களும், சிவன் கோயில் அர்ச்சகர்களும் குழங்கிழார்கள் என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றிருந்தனர். [1]

மேற்கோள்கள் தொகு

<references>

  1. 1.0 1.1 1.2 கரந்தை கோவிந்தராசனார், தமிழகத்தில் கோயில் அமைப்பு, மகாமகம் 1992 சிறப்பு மலர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலங்கிழார்&oldid=1794984" இலிருந்து மீள்விக்கப்பட்டது