கேசவ்தாஸ் (Keshavdas Mishra) 1555 ஆம் ஆண்டில் பிறந்ததாகவும் 1618 இல் இறந்ததாகவும் கருதப்படுகிறது. இந்தி இலக்கியத்தின் இறுதிக்கால கவிஞர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். சமஸ்கிருத காவியசாத்திரத்தை அறிமுகம் செய்து வைத்ததில் மிகச்சிறந்த மற்றும் மிகப் பழமையான கவிஞர் ஆவார்.

கேஷவ், சுசித்ரா

வாழ்க்கை அறிமுகம் தொகு

ஆச்சார்யா கேசவ்தாஸ் 1546 இல் ஓர்ச்சாவில் ஒரு பிராமணக்குடும்பத்தில் பிறந்தார்.[1] [2] இவரின் தந்தையார் பெயர் காசிநாத். ஓர்ச்சாவின் அரசவையில் இவரது குடும்பத்தை மிகவும் மரியாதையாக நடத்தியுள்ளனர். ஓர்ச்சாவின் மன்னர் ராமசிங்கின் சகோதரன் இந்திரஜித் சிங்கின் அரசவைக் கவிஞராகவும் அமைச்சராகவும் குருவாகவும கேசவதாஸ் இருந்துள்ளார்.[3] இந்திரஜித் சிங்கிடமிருந்து இவர் 21 கிராமங்களை இணைத்துள்ளார். 

கேசவதாஸ் சமஸ்கிருதத்தில் மிகச் சிறந்த வித்துவானாக இருந்துள்ளார். இவர் முழுமையாக சமஸ்கிருதத்தையே பின்பற்றியுள்ளார். இவரின் வேலையாட்களும் சமஸ்கிருதத்தைப் பேசியுள்ளனர்.

படைப்புகள் தொகு

ஒன்பது படைப்புகள் முக்கியமானவை.

அவை, ரசிகப்ரியா, கவிப்ரியா, ரத்னபாவனி, விஞான்கீதா,சந்த்மாலா, ராமசந்திரிகா, வீரசிங்கதேவ் சரித்திரம், நக்சிக் மேலும் ஜஹாங்கீர் ஜஸசந்திரிகா. ரசிகப்ரியா இவரின் மிக முக்கிய நுலாகும். இது காவியசாத்திரத்தை விளக்குகிறது.

 
ராதா மற்றும் கிருஷ்ணரின் சித்தரிக்கும் படம்

குறிப்புகள் தொகு

  1. Shackle (1996), ப. 214
  2. McGregor (1984), ப. 126
  3. Busch (2011), ப. 23-24
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசவ்தாஸ்&oldid=3485635" இலிருந்து மீள்விக்கப்பட்டது