கே. சரஸ்வதி அம்மா

இந்திய எழுத்தாளர்

கே. சரஸ்வதி அம்மா[1] மலையாளத்தின் பெண்ணியச் சிறுகதை எழுத்தாளர். இவர் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பிறந்தார். இவரின் சிறுகதைகள் பல அமெரிக்கப்புத்தகங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஜான்ஸி ஜேம்ஸ் என்னும் விமர்சகர் "கேரளத்தின் பெண் எழுத்தாளர்களில் அதீத துன்பியலை வேண்டுமென்றே புறக்கணித்த பெண் மேதை" என்கிறார்.[2]

கே. சரசுவதி அம்மா
பிறப்பு(1919-04-14)14 ஏப்ரல் 1919
இறப்பு26 திசம்பர் 1975(1975-12-26) (அகவை 56)
தொழில்பெண்ணீய சிறுகதை எழுத்தாளர்
மொழிமலையாளம் மற்றும் ஆங்கிலம்
தேசியம்இந்தியர்

இலக்கியப் போக்கு தொகு

கே. சரஸ்வதி அம்மா 1938 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுகதை மூலமாக மலையாள இலக்கிய உலகில் தன் பயணத்தைத் துவங்கினார். அது 12 பகுதிகளாக வெளிவந்தது. 1958 ஆம் ஆண்டில் ஒரு நாவல் மற்றும் நாடகத்தை எழுதினார். இவரது கட்டுரைகளின் தொகுப்பு புருஷன்மாரில்லாத லோகம் என்னும் பெயரில் வெளிவந்தது. இவரது காலத்தில் ஆண்களை வெறுப்பவர் என்று புறக்கணிக்கப்பட்டார். ஆனால் தற்போது பெண்ணிய எழுத்தாளர்களால் மேதை என்றுக் கொண்டாடப்படுகிறார்.[3]

இவரது சில அறிவியல் கதைகள் ஆங்கல மொழியில் "மறக்கப்பட்ட பெண்ணியத்தின் கதைகள்"(Stories from a forgotten feminist) எனும் தலைப்பில் வெளிவந்துள்ளன.[4][5] ஜான்ஸி ஜேம்ஸ் என்பவர் இவரது கதைகள் பெண்களின் ஆண் மற்றும் காதல் மேல்கொண்ட மாயையை உடைத்தெறியக்கூடியதாக இருக்கின்றன. ஆண்களேக் குடும்பத்தலைவன் என்னும் கலாச்சரத்தை மிக வன்மையாகச் சாடுகின்றன. இவர் பெண்ணியம் பேசுவதையே நற்பெயராக எண்ணுகிறார்.  

பணிகள் தொகு

நாவல் தொகு

  • பிரேமபாஜனம் (premabhajanam) 1944

நாடகம் தொகு

  • தேவதூதன் (Messenger of God) -1945

சிறுகதைகள் தொகு

  • பொன்னும்குடம் (Ponnumkudam )(Pot of Gold) - 1946
  • ஸ்ரீஜனனம் (SthreeJanmam) (Born as a woman) - 1946
  • கீழ்ஜீவனக்காரி (Keezhjeevanakkari)(Subjugatef woman)- 1949
  • கலமந்திரம் (Kalamandiram) (Temple of art) - 1949
  • பெண்புத்தி (Penbuddhi) (Women's wit) - 1951
  • கணத்த மதில் (Kanatha Mathil) (Thick wall) - 1953
  • பிரேம பரீக்ஷனம் (Prema Pareekshanam) (Experiment of love) - 1955
  • சுவண்ண பூக்கள் (Chuvanna Pookkal) (Red flowers) - 1955
  • சோளமரங்கள் (Cholamarangal) (Shady trees) - 1958

கட்டுரைத்தொகுப்பு தொகு

  • புருஷன்மாரில்லாத லோகம் (Purushanmaarillatha Lokam )(World without men)
  • மறக்கப்பட்ட பெண்ணியக் கதைகள்

மேற்கோள்கள் தொகு

  1. "Sarasvati Amma, Ke., 1919-1975". Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 21 February 2015. verso (K. Saraswathiyamma) p. 48 (born on April 14, 1919) p. 60 (died on December 26, 1975)
  2. Deepu Balan. "K. Saraswathiamma - sahithya Academy - Samyukta :: A Journal of Women's Studies". samyukta.info. Archived from the original on 2014-12-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
  3. J. Devika (June 2003). "Beyond Kulina and Kulata: the critique of gender difference in the writings of K. Saraswati Amma". Indian Journal of Gender Studies (Sage) 10 (2): 201–228. doi:10.1177/097152150301000202. http://dx.doi.org/10.1177/097152150301000202. 
  4. "Stories from a Forgotten Feminist, Jancy James (Introduction ) K Saraswaiti Amma - Shop Online for Books in Australia". fishpond.com.au.
  5. "Stories from a Forgotten Feminist: K. Saraswaiti Amma, Jancy James: 9788185107622: Amazon.com: Books". amazon.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சரஸ்வதி_அம்மா&oldid=3934996" இலிருந்து மீள்விக்கப்பட்டது