கொடிநிலை என்னும் துறைபற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

இக்காலத்தில் கோயில் விழாக்களைக் கொடியேற்றத்துடன் தொடங்குவர். இதனைத் தொல்காப்பியம் கொடிநிலை எனக் குறிப்பிடுகிறது. [1]

பாடாண்திணை எட்டு வகைப்படும். [2]
அவற்றில் முதல் ஆறு துறைகள் [3] அமரர்கண் முடியும். [4]
அமரர் என்போர் தெய்வநிலை எய்திய பெருமக்களும், தெய்வங்களும் ஆவர்.
கடவுள் மேலும், வேண்டியவர் மேலும் காமம் கொள்ளல் பின்னைய இரண்டு. அவை காமப்பகுதி [5] எனப்படும். [6]
காமப்பகுதி அவர்களைக் குழந்தையாக்கியும் [7] ஊரொடு தோற்றம் செய்தும் [8] இரு வகையில் பாடப்படும். தொல்காப்பியம் 3-81,82
கொடிநிலை, கந்தழி, வள்ளி ஆகிய மூன்றும் கடவுள் வாழ்த்தோடு ஒப்ப வைத்து எண்ணப்படும்.

புறப்பொருள் வெண்பாமாலை விளக்கம் தொகு

  • தொல்காப்பியம் அகத்திணை 7, புறத்திணை 7 எனப் பகுத்துக்காட்டியதை மாற்றிப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல் புறத்திணையை 12 படலங்களாகப் பகுத்துக் காட்டுகிறது. இந்த 12-இல் ஒன்று பாணாண் படலம். பாடாண் படலத்தில் 48 துறைகள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் தொல்காப்பியம் கொடிநிலை, கந்தழி, வள்ளி எனக் காட்டிய துறைகளுக்கும் துறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றும் அந்த 48 துறைகளில் அடங்கும்.
துறை விளக்கம்
அரசன் கொடியைப் புகழ்வது. "கொடிநிலையாவது, கொடியது தன்மை கூறுவது" என்று பெருந்தேவனார் இதற்கு விளக்கம் தருகிறார்.[9]
கொளு
மூவர் கொடியுள்ளும் ஒன்றொடு பொரீஇ
மேவரு மன்னன் கொடி புகழந்தன்று</ref>
துறைவிளக்கப் பாடலின் செய்தி
திருமாலின் கருடக்கொடி போல எம் மன்னன் கொடியைப் பல மன்னர்களும் பணிந்து போற்றட்டும்.[10]

இதையும் பார்க்கவும் தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே – தொல்காப்பியம் 3-85
  2. தொல்காப்பியம் – 3-78.
  3. கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல்
  4. தொல்காப்பியம் – 3-79
  5. தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம் போன்றவை
  6. தொல்காப்பியம் 3-80,
  7. பிள்ளைத்தமிழ்
  8. உலாநூல்கள் போன்றவை
  9. பொன்பற்றிப் காவலர் புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியம், பெருந்தேவனார் இயற்றிய உரையுடன், கா ர கோவிந்தராசனார் பதிப்பு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு 1970 பக்கம் 117
  10. பாடல்
    பூங்கண் நெடுமுடிப் பூவைப்பூ மேனியான்
    பாம்புண் பறவைக் கொடிபோல - ஓங்குக
    பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க்
    கொல்யானை மன்னன் கொடி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடிநிலை&oldid=3638072" இலிருந்து மீள்விக்கப்பட்டது