சத்யா (விருந்து)

சத்யா (Sadya) என்பது கேரளாவின் பாரம்பரிய விருந்து முறை ஆகும். சைவ உணவு இவ்விருந்தில் பரிமாறப்படும். வேகவைத்த அரிசிச் சோறுடன் காய்கறிகளால் செய்த குழம்பு மற்றும் கறிகள் இவ்விருந்தில் முக்கிய ஒன்றாகும். இவ்விருந்துடன் கடைசியில் பாயாசம் கொடுக்கப்படும். பொதுவாக இவ்வகையான விருந்தானது திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளின் போது செய்யப்படும் ஒன்றாகும். இவ்விருந்து வாழை இலையில் பரிமாறப்படும்.[1] தென்கேரளத்தில் பாயாசம் உண்டபின் சோற்றுடன் மோரும் வழங்கப்படும்.

வாழை இலையில் சத்யா விருந்து உணவு

உணவு வகைகள்

தொகு

இவ்விருந்தில் பொதுவாக இடம் பெறும் உணவுகள் ,

  • சோறு
  • சாம்பார்
  • பருப்பு
  • அவியல்
  • காலன்
  • பச்சடி
  • கிச்சடி
  • பொடுதோல்
  • துவரன்
  • புளிசேரி
  • ஓலன்
  • புளிஞ்சி
  • அப்பளம்
  • மோர்
  • காய் உப்பேரி
  • சர்க்கரை உப்பேரி
  • அசர் ஊறுகாய்
  • வாழைப்பழம்
  • பாயாசம்

மேற்கோள்கள்

தொகு
  1. Kerala's Slow Food; The Indian banana leaf banquet that tastes like home by Shahnaz Habib AFAR March/ April 2014 page 49
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யா_(விருந்து)&oldid=3661920" இலிருந்து மீள்விக்கப்பட்டது