சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது

சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது என்பது இந்திய அரசு அமைப்பான சாகித்திய அகாதமி, 35 வயதுக்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ‘இளம் எழுத்தாளர்’ (யுவ புரஸ்கார்) எனும் தலைப்பில் வழங்கிச் சிறப்பிக்கும் விருது ஆகும். இந்திய மொழிகளில் வெளியான கதை, கட்டுரை, கவிதை நூல்களுக்கு, மொழிகளின் வாரியாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மொழியிலும் வெளியான நூல்களில் கதை, கட்டுரை, கவிதை என்று ஏதாவது ஒரு நூலுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.[1]

விருதை வென்றவர்கள் (தமிழ்) தொகு

  1. 2011 எம். தவசி - சேவல்கட்டு - புதினம்
  2. 2012 மலர்வதி (இ. மேரி பிளாரா) - துப்புக்காரி
  3. 2013 கதிர் பாரதி - மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் - கவிதைகள்
  4. 2014 ஆர். அபிலாஷ் - கால்கள் - புதினம்
  5. 2015 வீரபாண்டியன் - பருக்கை - புதினம்
  6. 2016 லட்சுமி சரவணக்குமார் - கானகன் - புதினம்
  7. 2017 ஜெ. ஜெயபாரதி (மனுஷி) - ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள் - கவிதைகள்
  8. 2018 சுனீல் கிருஷ்ணன் - அம்பு படுக்கை (சிறுகதைத் தொகுப்பு)
  9. 2019 சபரிநாதன் - வால் (கவிதை தொகுப்பு)
  10. 2020 ஷக்தி - மரநாய் (கவிதைத் தொகுப்பு)
  11. 2021 கார்த்திக் பாலசுப்பிரமணியன் - நட்சத்திரவாசிகள் (புதினம்)
  12. 2022 ப. காளிமுத்து - தனித்திருக்கும் அரளிகளின் மதியம் (சிறுகதைத் தொகுப்பு)
  13. 2023 ராம் தங்கம் - திருக்கார்த்தியல் (சிறுகதைத் தொகுப்பு)

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-24.