சாழல் என்பது இரு பெண்கள் விளையாடும் ஒரு வகையான சொல்-விளையாட்டு ஆகும். இதில் ஒரு பெண் இறைவனின் செயல்களை ஏளனப்படுத்திப் பேசுவாள். மற்றொரு பெண் இறைவனின் செயல்களை உயர்த்திப் பேசுவாள்.

மாணிக்கவாசகர் பாடியுள்ள திருவாசகத்தில் 20 திருச்சாழல் பாட்டு இடம்பெறுகிறது.
இக்காலத்திலும் நாட்டார் வழக்கில் ஒரு பெண் சொலவடையால் விடுகதையைச் சொல்லியும், அதற்கு மற்றொரு பெண் சொலவடையாலேயே விடை கூறும் விளையாட்டு காணப்படுகிறது.

தென்பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண்பாலுகந்தான் பெரும் பித்தன் காணேடீ;
பெண்பால் உகந்திலனேல் பேதாய்! இருநிலத்தோர்
விண்பா லியோ கெய்தி வீடுவர் காண் சாழலோ![1]

‘வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றால் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய்! மாயமோ! மருட்கைத்தே [2]

மேற்கோள்கள் தொகு

  1. திருவாசகம்,1968,திருச்சாழல்:9
  2. திருமங்கை ஆழ்வார் சாழல் பாடல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாழல்&oldid=3254403" இலிருந்து மீள்விக்கப்பட்டது