'''அனுமன் '[[இந்து]] தொன்மவியலின் அடிப்படையில் இறைவன் [[இராமர்|இராம பிரானின்]] பக்தனும், இந்துக்களுடையஇந்துக்களின் கடவுளும் ஆவார். [[இராமாயணம்|இராமாயணத்தில்]] [[இராமர்|இராமரின்]] மிக முக்கியமானதொரு பாத்திரமாகமுக்கியமான [[வானரம்|வானரப்]] படையில் இடம் பெறுகிறார். அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தந்தையின் நாமம் கேசரீ (வானரத் தலைவர்). இவர்களின் குல தெய்வம் வாயு (பஞ்சபூதங்களில் ஒருவர்) ஆவார். இவரே அனுமனுக்குத் தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் அனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். இராமாயணம் தவிர [[மகாபாரதம்]] மற்றும் புராணங்களிலும் அனுமனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. அனுமன் இராமரின் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் தொண்டனாக விளங்கியவர். அனுமன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தவர்.பிற்காலத்தில் வட இந்தியாவில் அனுமனைச் சிவனின் அவதாரமாகவும் கருதுபவர்கள் உண்டு.'''
[[வைணவம்|வைணவக்]] கோயில்களில் அனுமாருக்குத் தனி சன்னிதி உண்டு. அனுமானை வைணவர்கள் [[விஷ்ணு|திருமாலின்]] '''சிறிய திருவடி''' என்று போற்றுகின்றனர்.