1931ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ந் திகதி பிறந்தவர். [[மானிப்பாய் இந்துக் கல்லூரி]]யில் படிக்கும்போது சிறந்த மாணவனுக்கான விருதைப் பெற்றவர். கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக [[இந்தியா]] சென்ற இடத்தில், [[இசை]], [[நாட்டியம்]], நாடகம் என்பவற்றால் கவரப்பட்டு, திருமதி [[ருக்மணிருக்மிணி தேவி அருண்டேல்|ருக்மணிதேவி அருண்டேல்]] (பரதநாட்டியம்), [[எம். டி. ராமநாதன்]] (இசை), பாபனாசம் சிவன் (சாஹித்ய குரு) ஆகியோரிடம் பயின்றவர். தாய்நாடு திரும்பி, தான் படித்த மானிப்பாய் இந்துக் கல்லூரியிலேயே ஆசிரியராக பணி புரிந்தார். சில ஆண்டுகளின் பின்னர், [[கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை]]யில் விரிவுரையாளராக இணைந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான இசை,நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார். ஏராளமான சாஹித்யங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள் மீதான பாடல்களையும் தன் வாழ்நாளில் இயற்றிய பிரம்மஸ்ரீ [[யாழ்ப்பாணம்]] என். வீரமணி ஐயர் 2003ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ந்திகதி காலமானார்.