முதலாம் காசியப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
}}
 
'''முதலாம் காசியப்பன்''' (''Kashyapa I'', பொ.பி. 479 - 497) என்பவன் [[இலங்கை மௌரிய மன்னர்கள்]] வம்சத்தில் இரண்டாம் மன்னனாவான். இவன் மௌரிய மன்னர்கள் வம்சத்தில் முதலாமனவனும் தன் தந்தையுமானவனான [[தாதுசேனன்]] என்பவனைச் சிறையில் அடைத்து கொன்றும் விட்டு அரசக்கட்டிலில் ஏறியவன். காசியப்பனின் தந்தையின் இன்னொரு மனைவியின் மகனும் ஆட்சிக்கு ஏற வேண்டிய பட்டத்து இளவரசனான [[முதலாம் முகலன்]] (பொ.பி. 497 - 515) என்பவன் தன் தந்தையைக் காசியப்பன் கொன்றுவிட்டதை அறிந்தவுடன் தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றான். அவன் திரும்பி வந்து தன்னைத் தாக்கக் கூடும் என்றெண்ணிய காசியப்பன் சீககிரி (தற்போதுள்ள [[அநுராதபுரம்|அநுராதபுரத்திலிருந்து]] தென்கிழக்கே இருக்கும் [[சிகிரியா]]) என்னும் மலைக்கோட்டை அரண்மனையைக் கட்டி அங்கிருந்து அரசாண்டான். இவனுடைய பதினட்டாம் ஆட்சியாண்டில் இவன் எதிர்பார்த்தபடியே முதலாம் முகலன் தன் நண்பர்களான தமிழ்நாட்டு [[நிகந்தர்]]களை இணைத்துக் கொண்டு படையெடுத்து வந்தான். தான் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தவுடன் காசியப்பன் தன் வாளால் தன் தலையை வெட்டி தற்கொலை செய்து கொண்டான். அதன் பிறகு முகலனே [[இலங்கை]]யை அரசாண்டான்.<ref>[[சூளசூல வம்சம்]], 39ஆம் பரிச்சேதம், 1 - 28</ref> கச்சியபன் இறப்பதற்கு முன் அவன் அனுப்பிய திருமுகம் ஒன்று ஆறாம் நூற்றாண்டின் போது சீன அரசன் ஒருவனுக்கு சென்றிருக்கிறது என்பதைக் கொண்டு இவன் அரசாட்சிக் காலத்தை ஐந்தாம் நூற்றாண்டென நிச்சயிக்க முடிகிறது.<ref>J.R.A.S. Ceylon Branch, XXIV, 85</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_காசியப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது