அருணாசலக் கவிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி விக்கியாக்கம் |
||
வரிசை 1:
'''அருணாசலக் கவிராயர்''' (1712-1779) என்பார் [[சீர்காழி]]யிலே வாழ்ந்து [[கருநாடக இசை]]யில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய [[இசை]] முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் [[தியாகராச சுவாமிகள்]], [[முத்துசாமி தீட்சதர்]], [[சியாமா சாஸ்திரி]] ஆகிய மூவருக்கும் முன்னிருந்த '''ஆதி மும்மூர்த்திகளில்''' ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. கருநாடக ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), [[மாரிமுத்துப் பிள்ளை]] (1717-1787), [[முத்துத் தாண்டவர்]] (1525-1625) ஆகியோர்.
அருணாசலக் கவிராயர் இயற்றிய [[இராம நாடகக் கீர்த்தனைகள்]] என்னும் ஒப்பரிய இசைப்பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. இசைநூல்கள் பல இயற்றிய இவர் இறையருளால் ஞான சித்தி பெற்றவர் என்று கூறப்படுகின்றார்.
இவர் இயற்றிய சில இசைப்பாடல்கள்:
*தில்லைத் தலம் போல சொல்லப் புவிமீதில், தெய்வத்த்ஸ்தலங்களுமுண்டோ நாளும் . - [[இராகம்]] - [[சௌராஷ்டிரம்]], [[தாளம்]] [[ஆதி தாளம்]]
*ஏன் பள்ளி கொண்டீர் அய்யா - ஸ்ரீ ரங்கநாதரே நீர், ஏன் பள்ளி கொண்டீர் அய்யா. இராகம் - [[மோகனம்]], தாளம் -
*துணை வந்தருள் புரிகுவாய் - அனுமந்தா நீ, துணை வந்தருள் புரிகுவாய்.
*ஆரோ இவர் ஆரோ - என்ன பேரோ அறியேனே.
*வந்தனர் எங்கள் கலியாண- ராமச்சந்திரன் திருமுடிகாண.
==உசாத்துணை==
|