மெய்யறம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் மெய்யறம், மெய்யறம் (நூல்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 7:
"மெய்யறம்" என்ற சொல்லில் இரு பகுதிகள் உள்ளன. முதல் பகுதி "மெய்". இரண்டாம் பகுதி "அறம்". "மெய்" என்றால் உண்மை என்று பொருள். "அறம்" என்பது தர்ம நெறி ஆகும். வ.உ.சி. இந்நூலில் உண்மையான அறத்தைப் பற்றி இளம் வயதினரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி உள்ளார். இந்நூல் மிக எளிய, சிறிய வரிகளின் தொகுப்பு ஆகும். இது அனைத்து வயதினருக்கும் ஏற்றது ஆகும். இந்நூல் தெளிந்த சிந்தனை, வாழ்க்கையைப் பற்றிய அறிவு, ஞானம் இவற்றை அளிக்கக் கூடியது ஆகும். இந்நூலில் இருந்து ஒழுக்கம், கலாச்சாரம், வாழும் முறை இவை குறித்து நாம் அறியலாம். இளஞர்கள் நல்வாழ்க்கை வாழ நன்னடத்தையைக் கற்பிக்கிறது. இது அறிவுரைகளைக் கட்டளைகளாகக் கூறுகிறது.
மெய்யறம் என்னும் இந்நூலில் 5பகுதிகளும் 125 அதிகாரங்களும் உள்ளன. ஒரு அதிகாரத்தில் பத்து வரிகள் உள்ளன. மொத்தம் 1250 வரிகள் உள்ளன. ஒவ்வொரு வரியும் ஒரு அறிவுரை கூறுகிறது.
=நூற் பிரிவுகள்=
 
=மாணவரியல்=
முதல் பகுதிபகுதியான "மாணவரியல்" மாணவர்களுக்கானது. அது 30 அதிகாரங்கள் கொண்டது. இந்தப் பகுதியில் வ.உ.சி. இளமைப் பருவமே கல்வி கற்பதற்கு ஏற்ற பருவம் என்று குறிப்பிடுகிறார். இப்பருவத்தில் கற்க வேண்டியவறைக்வேண்டியவற்றைக் கற்க வேண்டும், அறியக் கூடாதவற்றைத் தவிர்த்து விடவேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் கடமை, அடக்கம், கல்வி, உடல் நலம் இவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விளக்குகிறார். அவர் நமது உடல், ஆன்மா, மனம் இவை குறித்தும் கூறியுள்ளார். நமது மனமே நமது செயல்களுக்குக் காரணமாகும். நமது உடலை, அதாவது ஐம்புலன்களைக் கட்டுப்படுத்துவது நமது மனமே ஆகும். ஆன்மா நமது மனத்தை வழி நடத்துகறதுநடத்துகிறது. நமது விதியைத் தீர்மானிப்பது கடவுளல்ல, நாம்தான். ஏனெனில் நமது செயல்களின் பயனே நமது விதியாகும் என்று உறுதிபடக் கூறுகிறார். நமது நன்மைக்கும் தீமைக்கும் நமது செயல்களே காரணம். அதனால் நல்விதியை விரும்பினால் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்.
மாணவர்கள் இறைச்சி., மது, திருட்டு, புறம் கூறுதல், பொய், இரத்தல், பொறாமை,போதை பொருட்கள், பயனில் சொல் போன்றவற்றை விலக்கும்படி வ.உ.சி. கூறுகிறார். மேலும் நட்பு, நன்றி மறவாமை, நடுநிலைமை, அடக்கம், ஒழுக்கம், முயற்சி, ஊக்கம் போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கிறார்.
 
=இல்வாழ்வியல்=
இரண்டாவது பகுதியில்பகுதி "இல்வாழ்வியல்" ஆகும். இதில் 30 அதிகாரங்கள் உள்ளன. இதில் வ.உ.சி. இல்லறம் குறித்து விளக்குகிறார். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது குறித்து விளக்குகிறார். பின்னர் வாழ்க்கையை நல்ல முறையில் நடத்திச் செல்வதற்கும் அறிவுரைகள் கூறுகிறார். மறதி, காலம் தாழ்த்துதல், மடி, பேதைமை, வெண்மை போன்றவற்றை நீக்க வேண்டும் என்றும் அதிக துயில், அச்சம், அதிக ஆசை, செருக்கு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் வ.உ.சி. கூறுகிறார். பெற்றோர், குழந்தைகள், விருந்தினர், முன்னோர் ஆகியோரைப் பேணிப் பாதுகாப்பது நமது கடமை என்று அறிவுறுத்துகிறார்.சமுதாய வாழ்க்கை, அன்பு, பொறுமை, ஈகை ஆகியவை எவ்வளவு முக்கியம் என்று கூறுகிறார்.
 
=அரசியல்=
மூன்றாவது பகுதியில் 50 அதிகாரங்கள் உள்ளன. அதில் அரசாளும் முறை பற்றி விளக்குகிறார். 10 அதிகாரங்கள் கொண்ட நான்காவது பகுதியில் நல்லொழுக்கம் பற்றி கூறுகிறார். கடைசிப் பகுதியில் 5 அதிகாரங்கள் உள்ளன. அதில் உண்மை நிலை(கடவுளை)யை அடைவதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கிறார்.
மூன்றாவது பகுதி "அரசியல்" ஆகும். இதில் 50 அதிகாரங்கள் உள்ளன. இதில் ஒரு மன்னர் எப்படி அரசாள வேண்டும் என்று விளக்குகிறார். நல்ல அரசாங்கத்தின் முக்கியத்துவம், அதற்கு இருக்க வேண்டிய இயல்புகள் பற்றிக் கூறுகிறார். ஓர் அரசன் பரிவுடன் இருக்கவேண்டும், எதையும் ஆலோசித்துச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். ஒற்றர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் முக்கியத்துவம், ஒரு நாட்டின் சிறப்புகள் எவை, நாட்டிற்குப் பாதுகாப்பு எப்படி அளிக்க வேண்டும், தொழில்களின் சிறப்பு, படை எவ்வளவு அவசியம், ஓர் அரசன் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எவை என்று இந்தப் பகுதியில் தெளிவாகக் கூறுகிறார்.
 
=அந்தணரியல்=
10 அதிகாரங்கள் கொண்ட நான்காவது பகுதி "அந்தணரியல்" ஆகும். இது துறவறம் பற்றிக் கூறும் பகுதி ஆகும். இதில் துறவிகளின் இயல்பு, அவர்களுக்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியம், அவர்களுக்கு இருக்கக் கூடாத குணங்கள்(வெஃகாமை, வெகுளாமை, இன்னா செய்யாமை போன்றவை), அவர்கள் செய்ய வேண்டியவை(தவம், துறவு) ஆகியவற்றை விளக்குகிறார்.
=மெய்யியல்=
கடைசிப் பகுதி "மெய்யியல்" ஆகும். இதில் 5 அதிகாரங்கள் உள்ளன. இது மிகவும் நுட்பமானது. ஏனெனில் இது கடவுளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் அத்தியாயம் ஆகும். இதில் உண்மை நிலை(கடவுளை)யை அடைவதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கிறார். கடவுள் தான் உண்மை, மற்றவை எல்லாம் உண்மை அல்ல என்பதால் வ.உ.சி. கடவுளை "மெய்" என்றே அழைக்கிறார். கடவுள் என்பது என்ன, கடவுளைப் புரிந்து கொள்வது எப்படி, உணர்வது எப்படி, அந்த நிலைமையை அடைவது எப்படி என்று படிப்படியாக விளக்குகிறார். இந்தப் பகுதி ஆழ்ந்து படிக்க வேண்டிய பகுதி ஆகும்.
=உள்ளடக்கம்=
ஒவ்வொரு அதிகாரமும் ஒரு குறிப்பிடத்தக்க ஒழுங்குடன் உள்ளது. ஒவ்வொரு அதிகாரத்தின் முதல் வரியில் அதன் தலைப்பை விளக்குகிறார். அடுத்து வரும் வரிகளில் அதன் நன்மை, தீமைகளை எடுத்துச் சொல்கிறார். கடைசி வரியில் அதைப் பின்பற்ற வேண்டுமா தவிர்க்க வேண்டுமா என்று ஆலோசனை கூறுகிறார்.
எடுத்துக்காட்டாக 29- ஆவது அதிகாரமான "ஊக்கமுடைமை" என்ற அதிகாரத்தை எடுத்துக் கொள்ளலாம்.முதல் வரியில் ஊக்கம் என்பது என்னவென்று கூறுகிறார்: உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற மன உறுதியே ஊக்கம் ஆகும். இரண்டாவது வரி ஊக்கமுடைமையின் அவசியத்தையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் கூறுகிறது. மூன்றாவது வரி ஊக்கமில்லாதவர்களின் நிலையை விளக்குகிறது. நான்காவது, ஐந்தாவது வரிகள் ஊக்கமுடையவர்கள், ஊக்கமில்லாதவர்கள் இவர்களிடையே உள்ள வேற்றுமையை எடுத்துரைக்கின்றன. தொடர்ந்து வரும் வரிகளில் ஊக்கமுடைமையை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார். இவ்வாறு ஒவ்வொரு அதிகாரமும் முழுமையாகவும் ஓர் ஒழுங்குடனும் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மெய்யறம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது