யாழ்ப்பாணம் [[தென்மராட்சி]] [[சாவகச்சேரி]]யை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் [[யாழ்ப்பாணம்சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி]] மற்றும் [[யாழ் பரி யோவான் கல்லூரி]]களில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் [[1987]] ஆம் ஆண்டு [[இலங்கை]]யின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் "ரவிராஜ் அசோசியேட்ஸ்" எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் [[மனித உரிமைகள்]] சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.