கற்பகம் (மரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:இந்து சமயம் using HotCat |
சி added Category:தேவலோக மரங்கள் using HotCat |
||
வரிசை 1:
கற்பகம் என்பது புராணங்களில் சொல்லப்படும் ஒரு கற்பனை மரம். வானுலகைக் கற்பனையில் படைத்தவர்கள் அவ்வுலகில் கற்பகம் என்னும் மரம் இருப்பதாகலும் கூறிவைத்தனர். இந்த மரத்தடியில் நின்றுகொண்டு என்ன வேண்டும் என்று நினைத்தாலும் அது உடனே கிடைக்கும் என நம்பினர். இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்துக்கொண்டு நீதிநூல்கள் பாடிய பிற்கால ஔவையார் பழவினையின் வலிமையை விளக்கும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
தன் நெஞ்சுக்கு நீதி கூறுவதாக அந்தப் பாடல் அமைந்துள்ளது.
நெஞ்சே! உன் தலையெழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும். நீ ஆசைப்பட்டதெல்லாம் உனக்குக் கிட்டாது. அரிதின் முயன்று கற்பக மரத்தடிக்குச் சென்று நீ ஏதேதோ ஆசைப்படும்போது அந்த மரம் உண்டால் சாவும் நச்சுத்தன்மை வாய்ந்த எட்டிக்காயை (காஞ்சிரங்காயை) தருமேயானால் அது நீ முற்பிறவியில் செய்த தீவினையின் பயன் என எண்ணிக்கொள்க.<ref>
<poem>
எழுதிவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ மருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. - மூதுரை என்னும் வாக்குண்டாம் - பாடல் 22
</poem></ref>
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
[[பகுப்பு:கற்பனை மரங்கள்]]
[[பகுப்பு:தொன்மவியல்]]
[[பகுப்பு:தேவலோக மரங்கள்]]
|