பசுந்தாள் உரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்ளிணைப்புக்கள்
No edit summary
வரிசை 1:
'''பசுந்தாள் உரம்''' [[இயற்கை வேளாண்மை]]யில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். [[நைதரசன்|நைட்ரஜன்]] போன்ற மூலப்பொருள், [[சேதனச் சேர்வை|சேதனப் பொருட்களை]] நிலஊட்டல் மூலம் [[மண்|மண்ணிற்கு]] வழங்குவதற்கு இம்முறை உதவுகிறது. செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் உண்டாகும் [[நீர்]], [[மண்]] மாசுபாடு இம்முறையால் தடுக்கப்படுகிறது.
 
பொதுவாக [[அவரை]] [[இனம் (உயிரியல்)|இனத்]] தாவரங்கள் இவ்வகையான பசுந்தாள் உரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவரையினத் தாவரங்களின் [[வேர்]]களில் உள்ள கணுக்களில் Rhizobia [[பாக்டீரியா]]வின் உதவியுடன் [[நைதரசன் நிலைப்படுத்தல்]] நிகழ்வதனால், அவை நைதரசன் செறிவான தாவரங்களாக இருக்கின்றன. எனவே இவை மீண்டும் மண்ணில் சேர்க்கப்படும்போது, பயிர்களுக்கு அத்தியாவசியமான தாதுப்பொருளான நைதரசன் மண்ணில் சேர்க்கப்பட்டு மண்ணின் வளம் கூடுகின்றது.
 
[[கொழுஞ்சி]], சணப்பை, [[எருக்கன்|எருக்கு]], புங்கம், நுணா, [[வேம்பு]], பூசரவு மற்றும் ஆடாதொடா ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் பசுந்தாள் உரங்கள் ஆகும். இவற்றுள் கொழுஞ்சி, சணப்பை போன்ற செடிகள் வேளாண் நிலத்தில் பயிரிடப்பட்டு, அவை வளர்ந்து பூக்கும் முன்னரே அப்படியே உழுது நிலத்துடன் சேர்க்கப்படுகின்றன. நிலத்தில் இந்த பருவத்தில் பசுந்தாள் உரம் இடுவது அடுத்த பருவத்தின் விளைச்சலில் முன்னேற்றம் தரும் என்று நம்பப்படுகிறது.<ref>[http://agritech.tnau.ac.in/ta/itk/IndigenousTechKnowledge_Oper_ta.html தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் - பயிர் சாகுபடி செயல்களில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு]</ref>
"https://ta.wikipedia.org/wiki/பசுந்தாள்_உரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது