தம்பிலுவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
இன்றைய [[திருக்கோவில்]] உள்ளிட்ட தம்பிலுவில் பகுதியானது, பண்டு "நாகர்முனை" என அறியப்பட்ட தொன்றமிழ்க் குடியிருப்பாகும். இங்கு குடியிருந்த தொன்றமிழரான நாகரின் வேல் மற்றும் தாய்த் தெய்வ வழிபாடுகளே இன்று திருக்கோவில் மற்றும் கண்ணகியம்மன் ஆலயங்களாகப் பரிணமித்துள்ளன எனலாம். 11ஆம் நூற்றாண்டளவில், [[மட்டக்களப்பு|மட்டக்களப்பின்]] முதலாவது தேசத்துக் கோவிலான [[திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்|திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின்]] திருப்பணிக்கென கலிங்கமாகனால் அழைத்து வரப்பட்ட சோழநாட்டு மக்கள் இங்கேயே குடியமர்த்தப்பட்டனர்.
 
[[உகந்தை]]யைத் தலைநகராகக் கொண்டு உன்னரசுகிரி என்ற பெயரில் தென்மட்டக்களப்பை ஆண்ட மேகவண்ணன் என்ற சிற்றரசன், தன் தாயும் சோழ இளவரசியுமான "தம்பதி நல்லாளை" நினைவுகூரும் விதமாக இங்கோர் குளம்வெட்டி அதற்கு "தம்பதிவில்" <ref> ஈழத்தமிழில் "வில்" என்பது குளத்தைக் குறிக்கும். பொத்துவில், ஒலுவில், கொக்குவில் என்று பல ஊர்கள் அங்குண்டு </ref> என்று பெயரிட்டான் என மட்டக்களப்பு மான்மியம் கூறும். அதுவே திரிந்து தம்பிலுவில் என்றானது.
 
 
கணபதி ஐயர் எனும் இக்கிராமத்து அர்ச்சகர் ஒருவர் தாய்மொழிப் புலமை வாய்ந்தவராக இருந்தாரென்றும், [[கண்டி இராச்சியம்|கண்டியை]] அவர் காலத்தில் ஆண்ட நரேந்திரசிங்க மன்னனின் (1707-1739) அரசவையை அலங்கரித்தாரென்றும் அவர் பாடிய "நரேந்திரசிங்கன் பள்ளு" நூலைச் சான்று காட்டுவர். ஒல்லாந்தர் காலத்தில் கண்ணப்பன் எனும் கண்ணகியம்மன் ஆலய அர்ச்சகர் பாடிய "மழைக்காவியம்" மூலம் மழையிலாத நாட்களில் மழை பொழிவிக்கும் அற்புதம் இன்றும் நிகழ்கிறதாம்.
 
 
 
==தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில்==
"https://ta.wikipedia.org/wiki/தம்பிலுவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது