}}
'''வாழைச்சேனை''' (''Valaichchenai'') [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரம். [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்டத்தில்]] நகரில்அமைந்துள்ள இருந்துஒரு 32 கிமீ தூரத்தில் உள்ளதுநகரம். [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] புகழ் பெற்ற [[பாசிக்குடா]] கடற்கரை வாழைச்சேனை நகரில் இருந்து 3 கிமீ கிழக்கே அமைந்துள்ளது.
இந்நகரம் [[மட்டக்களப்பு]] நகரிற்கு வடக்கே 30 கிமீ தொலைவிலும் [[பொலன்னறுவை]]க்குக் கிழக்கே 70 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. கொழும்பு-மட்டக்களப்பு தொடருந்துப் பாதையும் ஏ-15 நெடுஞ்சாலையும் இந்நகரூடாகச் செல்கின்றன.
கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள வாழைச்சேனை மிக முக்கிய நகரங்களில் ஒன்று. இந்நகரம் மட்டக்களப்பிற்கு வடக்கே முப்பது கிலோமீட்டர் தொலைவிலும் பொலன்னறுவைக்குக் கிழக்கே எழுபது கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. வாழைச்சேனைக்கூடாகச் செல்லும் புகையிரதப் பாதையும் ஏ-15 பிரதான வீதியும் கிழக்கிலங்கையை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைப்பதனால் இந்நகரம் கேந்திர முக்கியத்துவமானதாகத் திகழ்கின்றது.
வாழைச்சேனையின் மேற்கிலிருந்து வடக்கு எல்லையாக, வாழைச்சேனை ஆறு எனப் பெயர்பெற்ற மதுறுஓயாவின்[[மதுறு ஓயா]]வின் வடிச்சல் செல்கிறது. வாழைச்சேனை ஆறு கிழக்கிலே பாசிக்குடாவின்[[பாசிக்குடா]]வின் வடக்கு முனையில் வங்காள விரிகடலுடன் இணைகின்றது. தெற்கில் [[ஓட்டமாவடி]] எனும் முஸ்லிம் நகரம் உள்ளது. வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதி இவ்வூரை இரண்டாகப் பிரிக்கின்றது. வாழைச்சேனை கிழக்கில் [[இலங்கைத் தமிழர்|தமிழரும்]] மேற்குப் பிரதேசம் முழுவதும் [[இலங்கைச் சோனகர்|முஸ்லிம்களும்]] வாழ்கின்றனர். வாழைச்சேனையின் கிழக்கு எல்லையாகப் பேத்தாழைக் கிராமம் உள்ளது.
வாழைச்சேனை ஆற்றுடன் இணைந்து தற்போது அமைக்கப்பட்டுள்ள மீன்பிடித்துறைமுகம் ஒரு காலத்தில் பிரபல்யம் பெற்று விளங்கியது. தபாற்துறை அல்லது வங்களாத்துறை என அழைக்கப்பட்ட இவ்விடம் மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்குமிடையிலான[[திருகோணமலை]]க்கும் இடையிலான போக்குவரத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. பின்னர் ஆற்றின் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்ட ஓட்டமாவடிப் பாலம் புகையிரத மோட்டார்ப் போக்குவரத்திற்கு வழியமைத்ததால் நீர்ப்போக்குவரத்தின் தேவை நின்றுவிட்டது. ஆயினும் இப்பகுதியின் தொழில்துறை வளர்ச்சியாலும் குறிப்பாக மீன்பிடி காரணமாகவும் இப்பகுதி வேகமாக வளர்ச்சியடைந்தது.
வாழைச்சேனையின் வெருகல், [[வாகரை]] தொடக்கம் தெற்கிலுள்ள [[வந்தாறுமூலை]] வரை உள்ள மக்கள் அனைவரும் வாழைச்சேனையுடன் தொடர்புள்ளவர்களாகவே விளங்குகின்றனர். இவர்கள் தமக்குத் தேவையான பொருட்களை வாங்கவும் தமது உற்பத்திப் பொருட்களை விற்கவும் வாழைச்சேனை சந்தையைப் பயன்படுத்துகின்றனர். வாழைச்சேனை நகரம் கிழக்கிலங்கையில் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைக்குப் பெயர்பெற்ற இடமாக விளங்குகின்றது.
வாழைச்சேனைப் பிரதேசத்தில் தமிழரும் முஸ்லிம்களும் வாழ்கின்றனர். இப்பிரதேசம் இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு காடடைந்த பிரதேசமாக இருந்தது. இங்கு கல்குடாத்துறையை ஒட்டிய பகுதியில் ஆதிக்குடிகளான வேடுவர் வசித்து வந்தனர். மலைநாட்டிலும் பிறபிரதேசங்களிலிருந்தும் குடிப்பெயர்ச்சிகள் இடம்பெற்ற போது முஸ்லிம்களும் தமிழர்களும் இங்கு குடியேறினர்.
வாழைச்சேனை ஆற்றின் மேற்குக்கரையோரமாக விளங்கிய மருங்கையடிப் பூவல் பிரதேசம், வடிச்சல் நிலமாகவும் பயிர்ச் செய்கைக்கு உகந்ததாகவும் விளங்கியதால் படிப்படியே முஸ்லிம்களின் குடியிருப்புகள் அப்பிரதேசத்தை நோக்கி நகரலாயிற்று. இங்கு குயிடியேறியோர் வாழைமரப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர். சேனைப் பயிர்ச்செய்கை என்ற வகையில் வாழைச்சேனையென இவ்விடம் பெயர் பெறலாயிற்று. வாழைமரங்களை பெருமளவு செய்கை பண்ணிய நிலச்சொந்தக்காரர் வாழைச்சேனையார் எனவும் பெயர் பெற்றனர்.
மருங்கையடிப்பூவல் என அழைக்கப்பட்ட இப்போதுள்ள வாழைச்சேனை நான்காம் வட்டாரப் பிரதேசமே ‘வாழைச்சேனை’ என்ற பெயருக்குரியதாய்த் திகழ்ந்தது. மருங்கைப்பூவல் என்ற பிரதேசத்தையொட்டி இருந்த, கசட்டையடி, நாவலடி, வெம்பு ஆகிய இடங்கள் பின்னர் வாழைச்சேனையுடன் இணைந்து பெயர் பெற்றன. நாவலடி, வெம்பு ஆகிய இடங்களில் நாவல் மரங்களும் காசான் பற்றைகளும் முந்திரிகை மரங்களும் நிறைந்து காணப்பட்டன. 1900 களுக்குப் பிறகே இப்பிரதேசம் மனித குடியிருப்புகளுக்கு ஏற்றனவாக மாற்றமடைந்தன.
== வாழைச்சேனை வரலாறு ==
வாழைச்சேனையின் ஆரம்ப கால வரலாறு குறித்து ஒரு சில நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள வை.அகமதுவின் “வாழைச்சேனை வரலாறு“, திருமதி.சி.ப.தங்கத்துரை எழுதிய “ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய வரலாறு“, தாழை செல்வநாயகம் எழுதிய “வாழைச்சேனையின் வரலாற்று விழுமியங்கள்“ போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
== மக்கள் பரம்பல் ==
== வாழைச்சேனையின் இலக்கிய முகங்கள்==
தாழை செல்வநாயகம், கறுவாக்கேணி முத்துமாதவன், ஹெட்டி ஆராச்சி மெத்தியேஸ், வாழைச்சேனை அமர், வாழைச்சேனை அகமது, மு.தவராஜா, எ.த.ஜெயரஞ்சித், க.ஜெகதீஸ்வரன், வாழைச்சேனை எஸ்.ஏ.ஸ்ரீதர், கல்குடா பரமானந்தராஜா போன்றோர் குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்பாளிகள்.
புனைகதை உலகின் மிக முக்கிய ஆளுமையான எஸ்.பொ. அவர்கள் வாழைச்சேனை
இந்துக்கல்லூரியில் அதிபராக கடமையாற்றியிருக்கிறார். அவர் வாழைச்சேனை குறித்த தனது
அனுபவங்களை தன்னுடைய “வரலாற்றில் வாழ்தல்“ நூலில் விரிவாக எழுதியுள்ளார்.
தாழை செல்வநாயகம், கறுவாக்கேணி முத்துமாதவன், ஹெட்டி ஆராச்சி மெத்தியேஸ்,
வாழைச்சேனை அமர், வாழைச்சேனை அகமது, மு.தவராஜா, எ.த.ஜெயரஞ்சித்,
க.ஜெகதீஸ்வரன், வாழைச்சேனை எஸ்.ஏ.ஸ்ரீதர், கல்குடா பரமானந்தராஜா போன்றோர்
குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்பாளிகள்.
== பாடசாலைகள் ==
|