'''ரமேஷ் பிரேதன்''' தமிழகத்தில் [[பின்நவீனத்துவம்|பின்நவீனத்துவ]] [[தத்துவம்|தத்துவங்கள்]], விமர்சனக் கோட்பாடுகள், படைப்புகள் ஆகியவற்றைத் [[தமிழ்|தமிழில்]] அறிமுகம் செய்து, அது குறித்த விவாதங்களை உருவாக்கி, [[தமிழ்]] அறிவுலக விமர்சனப் போக்கை ஆக்கபூர்வமானதாக மாற்றியவர்களுள் குறிப்பிடத் தக்கவர். பின் நவீனத்துவ[[பின்நவீனத்துவம்|பின்நவீனத்துவ]] படைப்பிலக்கியவாதியாகவும் விமர்சகராகவும் அறியப்படுகிறார். [[இலக்கியம்|இலக்கியத்தின்]] வளர்ச்சிப் போக்கை ஆராய்ந்து சரியான பாதையில் தமிழிலக்கியம் வளர தன் பங்களிப்பை அளித்து வருகிறார். பின்நவீனத்துவ படைப்பிலக்கியத்தின் தேவையை இவரின் ஆக்கங்கள் மூலமாக பூர்த்தி செய்கிறார். இவர் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் என தமிழிலக்கியத்தின் பல தளங்களில் கடந்த இருபது ஆண்டுகளாக இயங்கி வருகிறார். பாண்டிச்சேரி அரசின் ”கம்பன் புகழ் விருது” இரண்டு முறை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது ரமேஷ் பிரேதன், முழு நேர எழுத்தாளராக பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார்.