பயனர்:Chenkodan Sabalingam/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
}}
 
இதன்பிறகு "மியூற்றன்று" எனும் பெயர்கொண்டு இயங்கும் காடையர் கும்பலின் மோதல் நடவடிக்கைகளிலிருந்து காரீ கெல்லி எனும் பதின்மூன்று வயதுச் சிறுமியை பேட்மேன் காக்கிறார். பேட்மேனின் காலஞ்சென்ற உதவியாளன் "உறொபின்" போல உடையணிந்து நகரெங்கும் அவரைத் தேடிச் செல்கிறாள் அச்சிறுமி. நகரத்தின் குப்பை கொட்டும் பகுதியில் "மியூற்றன்று" அமைப்புடன் மோதுகையில் அவரைக் காண்கிறாள். தனது போர்க்கருவிகள் மூலம் மியூற்றற்றுகளைத் தோற்கடிக்கின்றபோதிலும், அவர்களின் தலைவிதலைவனை வீழ்த்தும் முயற்சியில் தோல்வியடைகிறார் பேட்மேன். மியூற்றன்று தலைவனின் கவனத்தை சிதறடித்து பேட்மேன் தப்பிக்கக் கெல்லி உதவுகின்றாள். பிற்பாடு பேட்மேன், ஓய்வுபெறும் காவற்றுறை அதிகாரியான சேம்சு கோடன் மற்றும் கெல்லியின் உதவியுடன் மியூற்றன்று தலைவனை வெல்கிறார். சிதறடிக்கப்பட்ட மியூற்றன்று அமைப்பின் அங்கத்தவர்கள் சிலர் "சன்சு ஒப் பேட்மேன்" (பேட்மேனின் மகன்கள்" என்ற புது அமைப்பை உருவாக்குவதுடன், குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்கிறனர்.
 
மனநலம் பாதிக்கப்பட்டு ஆக்கம் புகலிடத்தில் அனுமதிக்கப்படும் குற்றவாளியான சோக்கர், பேட்மேனின் மீள்வருகையால் கண்திறக்கின்றார். தான் குணமடைந்து விட்டதாகப் பிறரை நம்பவைக்கும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நச்சுப்புகையின் பிரயோகத்தினால் அங்குள்ள அனைவரையுள்அனைவரையும் கொல்கிறார். மீண்டும் களியாட்ட நிகழ்வொன்றில் மக்களைக் கொலை செய்யும் இவரைத் தேடி பேட்மேன் வருவதற்குள் காலம் கடந்துவிடுகிறது. கடுங்கோபமுற்ற பேட்மேன் சோக்கரைக் முரட்டுத் தனமாகத் தாக்குகிறார். பெத்மேனைக் குற்றவாளி என்று மற்றோரை நம்பவைப்பதற்காக சோக்கர் தனது கழுத்தைத் திருகித் தற்கொலை செய்கிறார். இதிலிருந்து தப்பிச் செல்லும் பேட்மேனைப் பிடிக்கக் காவற்றுறையினர் நகரமெங்கும் வலைவீசுகின்றனர்.
 
இதன்பிறகு சூப்பர்மேன் இரசிய அணுகுண்டொன்றைத் திசைதிருப்பிப் பாலைவனமொன்றில் வெடிக்கச் செய்கின்றார்.இதன் விளைவாக ஏற்பட்ட மின்காந்த அனர்த்தத்தினால் ஐக்கிய அமெரிக்கா முழுவதும் இருளில் மூழ்குவதால் நாடெங்கும் கலவரங்கள் ஏற்படுகின்றன. பேட்மேன் இதை உணர்ந்து உறோபினுடன் (காரீ கெல்லி) "சன்சு ஒப் பேட்மேன்" அமைப்பினரை உயிர்கொல்லாப்படையினராக மாற்றுகிறார். கலவரங்களில் கடைகளை உடைத்துத் திருடும் மக்களைத் தடுக்க அவர்களை அழைத்துச் செல்லும் அவர் அத்தியாவசியப் பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வழிசமைக்கிறார். அணுவாயுத அனர்த்தத்தினால் விளைந்த கலவரங்களிலிருந்து காக்கப்பெற்ற நாட்டின் ஒரேயொரு நகரமாக கோதம் மாறுகிறது. இதனால் சங்கடப்படும் அமெரிக்க அரசாங்கம் பேட்மேனை ஒழிக்க சூப்பர்மேனிடம் கட்டளையிடுகிறது. இந்நிகழ்வை ஒலிவர் குயீன் (முன்னாள் கிறீன் அரோ) பேட்மேனுக்கு எதிர்வுகூறுகிறார். தான் முதலில் பேட்மேனாக உருவெடுத்த கிரைம் அலீயில் சூப்பர்மேனைத் தோற்கடிக்க முடிவுசெய்யும் பேட்மேன், அணுவாயுத வெடிப்பினால் தளர்ந்து போயுள்ள சூப்பர்மேனின் பலவீனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த எண்ணுகிறார்.
 
சூப்பர்மேன் பேட்மேனுக்கு விளக்கமளிக்க முயல்கின்றபோதிலும், பேட்மேன் தனது தொழ்நுட்பக் கண்டுபிடுப்புக்கள் மட்டும் வர்மக்கலைப் பயிற்ச்சிகளின் உதவியுடன் அவருடன் மோதுகிறார். பேட்மேனின் கவசத்தில் தாக்கும் சூப்பர்மேனை, ஒலிவர் குயீன் கிரிப்ரன் பதிக்கப்பட்ட அம்பினை எய்து பலவீனமடையச் செய்கிறார். திடீரென்று பேட்மேனுக்கு மாரடைப்பு வந்து சாகும் தருவாயில் இருக்கின்றார். அவரது உதவியாளரான அல்பிரடு பெனிவேத்து, பேட்மேனின் இல்லமான வெய்ன் மனர் மற்றும் பதுங்குமிடமான பேட்கேவை வெடிக்கச் செய்வதன் மூலமாக அவரது இரகசிய அடையாளத்தை வெளியுலகுக்குத் தெரியப்படுத்துகிறார். பக்கவாதத்தினால் அவதியுறும் அவர் பின்பு மரணிக்கிறார். வெய்னின் மரணச் சடங்கின் பிறகு, பேட்மேன் இன்னும் உயிரோடுதானிருக்கிறார் எனவும், அவர் இரசாயனங்களின் பாவனையுடன் மரணித்தாக வெளியுலகை நம்பவைத்தார் என்றும் தெரியவருகிறது. அவருடைய இதயத்துடிப்பு மீண்டும் கேட்கவே, கிளாக்கு கென்ற்று கெல்லியைப் பார்த்துக் கண்சிமிட்டுகிறார். சிகாலத்தின் பின்பு புறூசு வெய்ன் கெல்லி, குயீன் மற்றும் தன்னைத் தொடரும் பிறரின் உதவியுடன் உலகைக் காப்பாற்றும் தனது யுத்தத்தை மீளத் தொடங்குகிறார். இதற்காக அவர்கள் ஒரு இராணுவத்தைத் தோற்றுவிக்கின்றனர்.
 
காவி இடென்ற்று/ உரூபேசு: கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஆக்கம் புகலிடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர் தற்போது தனது ஐம்பதாவது அகவையிலுள்ளார். மேலும் மூன்று வருடமாக வைத்தியரான வோல்பரின் கண்காணிப்பிலிருக்கும் இவருக்கு முகச்சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. வோல்பரால் குணமடைந்துவிட்டார் என்று சான்றிதழ் கொடுக்கப்பட்ட இவர் உண்மையில் பழைய எண்ணங்களுடனேயே இருக்கின்றார். தனது முகத்தின் இருபக்கமும் சேதமடைந்தாக எண்ணிக்கொள்ளும் இடென்ற்று, முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டு நகரத்தை அச்சுறுத்துகிறார்.
 
த சோக்கர் (கோமாளி): பேட்மேனின் மீளெழுச்சிகண்டு குணமடையும் அவரது பரம விரி ஆவார். கதையின் அரைப்பகுதியின் பின்னரான முக்கிய வில்லனாக இவர் இருக்கிறார். முரட்டுத்தனமான செய்கைகளின் மூலம் பேட்மேனுடனான தனது இறுதி மோதலுக்கு வழிகோலுகிறார்.
 
கலாநிதி/ வைத்தியர் பாத்தலோமியோ வோல்பர்: காவி இடென்ற்று மற்றும் சோக்கரின் வைத்தியரும் பேட்மேனை எதிர்ப்பவருமான இவர், தனது நோயாளிகள் இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டதற்கு பேட்மேன் தான் காரணம் என்று தவறாக அர்த்தம் கொள்கிறார். சோக்கர் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் வெளியிடும் நச்சுப்புகைக்கு இவர் பலியாகிறார்.
 
எலன் இயிண்டல்: சேம்சு கொடனின் இடத்தை நிரப்பும் காவற்றுறை அதிகாரி. பேட்மேனை விமர்சிக்கும் இவர், சோக்கரின் குற்றங்களால் தந்து எண்ணங்களை மாற்றிக்கொள்கிறார்.
 
ஒலிவர் குயீன்: சூப்பர்கீரோக்கள் சமூகவிரோதிகளாக அறிவிக்கப்பட்டபின்பு, இவர் அரசாங்கத்துக்கு எதிரான இயக்கத்தை நடத்துவதுடன் அவர்களின் அணுவாயுத நீர்மூழ்கிக்கப்பலை அழிக்கின்றார். இவர் தனது இடது கையைizhanthamaikku சூப்பர்மேனைச் சாடுகிறார். மாற்றுத்திறனாளியாக இருப்பினும் இவர் இன்னமும் ஒரு சிறந்து வில்லாளியாகவுள்ளார்.
 
கல் எல்/கிளாக்கு கென்ற்று/ சூப்பர்மேன்: தற்போது ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின்கீழ் வேலைசெய்யும் இவருடைய இரகசிய அடையாளம் இப்போது அனைவராலும் அறியப்பட்டது. அவர் மனதளவில் அரசாங்கத்தை எதிர்க்கும்போதிலும் தனது வயது காரணமாக மக்களைக் காக்கும் ஒரே வழி இதுவே என உணரும் அவர் அதற்காக வில்லனாக மாற நேருகின்றது. இறுதியில் அரசாங்கத்தின் கட்டளையின் பேரில் பேட்மேனை ஒழிக்க முயல்கின்றபோதிலும், ஒலிவர் குயீனினால் எய்யப்பட்ட கிரிப்ரன் பதிக்கப்பட்ட அம்பு தைக்கவே, பெத்மீனுக்கு அது சாதகமாக அமைகின்றது.
 
செலினா கைல்: தனது கேட்வுமன் அடையாளத்திலிருந்து விலகி வாழுகின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Chenkodan_Sabalingam/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது