ம. சு. விசுவநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 24:
'''மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன்''' அல்லது '''எம். எஸ். விஸ்வநாதன்''' (''M. S. Viswanathan'', அல்லது பொதுவாக '''எம்எஸ்வி''', பிறப்பு: 24 சூன் 1928) [[இந்தியா]]வின் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] இசையமைப்பாளர் ஆவார். இவர் [[கேரளா]]வின் [[பாலக்காடு|பாலக்காட்டுக்கு]] அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்ரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி)<ref>http://www.lakshmansruthi.com/profilesmusic/msv.asp லட்சுமன் சுருதி -விசுவநாதனின் தாய் தந்தை</ref>. விசுவநாதன் [[1953]] ஆம் ஆண்டில் வெளிவந்த [[ம. கோ. இராமச்சந்திரன்|ம. கோ. இராமச்சந்திரனின்]] [[ஜெனோவா]] திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். [[தமிழ்]] திரைப்படங்களில் அதிகம் பணிபுரிந்தாலும் [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[இந்தி]], [[கன்னடம்|கன்னட]] படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் 1200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
 
==வாழ்க்கை==
 
தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருசுணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு [[கருநாடக இசை]]யை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13​வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.<ref>http://www.thinaboomi.com/2012/08/29/15186.html</ref>. இசையமைப்பாளர் [[சி. ஆர். சுப்புராமன்]] இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் [[டி. கே. ராமமூர்த்தி]] வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள். உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள் <ref>[http://www.cinemaexpress.com/cinemaexpress/story.aspx?Title=%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D!+-+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE&artid=110434&SectionID=128&MainSectionID=128&SectionName=News&SEO= சுப்பராமனின் பணியை முடித்துக்கொடுத்தல்]</ref>. தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும் '''பணம்''' என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள் <ref>http://www.tamiloviam.com/site/?p=2086</ref>. [[ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்)|ஆயிரத்தில் ஒருவன்]] திரைப்படம் வரை 700 படங்களுக்கு இணைந்து இசையமைத்தார்கள். இவர் தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவோடு சேர்ந்து, [[மெல்லத் திறந்தது கதவு]], [[செந்தமிழ்ப் பாட்டு]], [[செந்தமிழ் செல்வன்]] என மூன்று படங்களுக்கு இசை அமைத்துள்ளார் <ref>http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=1716</ref>. 1995-ல் [[சத்யராஜ்]] நடித்த [[எங்கிருந்தோ வந்தான் (1995 திரைப்படம்)|எங்கிருந்தோ வந்தான்]] என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள்.. 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி மதராஸ் ட்ரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர் [[ஸ்ரீதர் (இயக்குனர்)|ஸ்ரீதர்]] மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனால்]] விசுவநாதன்-இராமமூர்த்திக்கு '''மெல்லிசை மன்னர்கள்''' என்று பட்டம் வழங்கப்பட்டது
 
"https://ta.wikipedia.org/wiki/ம._சு._விசுவநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது