திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தொடர்ச்சி
சி தொடர்ச்சி
வரிசை 215:
 
===பிரான்சிசு கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ட்ரோவை சந்திக்கிறார்===
திருத்தந்தை பிரான்சிசின் கியூபா பயணத்தின் ஒரு உச்சக்கட்டம் அவர் பிடெல் காஸ்ட்ரோவை சந்தித்தது ஆகும்.<ref>[http://www.cnnnbcnews.com/2015storyline/09/20/worldpope-francis-visits-america/pope-francis-meets-fidel-castro-second-day-cuba-conflicts/visit-n430641 திருத்தந்தை பிரான்சிசு - பிடெல் காஸ்ட்ரோ சந்திப்பு]</ref> இரு தலைவர்களும் உலக நடப்புப் பற்றியும், சுற்றுச் சூழல் சீரழிவு பற்றியும் பொதுவாக உரையாடியதாகத் தெரிகிறது. இரு தலைவர்களும் சில நூல்களைப் பரிசாகப் பரிமாறிக்கொண்டார்கள். பிரான்சிசு தாம் எழுதிய இரு சுற்றுமடல்களை (”மகிழ்ச்சிதரும் நற்செய்தி”, “சுற்றுச் சூழல் பாதுகாப்பு”) பரிசாகக் கொடுத்தார். மேலும் ஆன்மிக வாழ்வு பற்றிய ஒரு நூலையும் கொடுத்தார். பிடெல் காஸ்ட்ரோவுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்து, பின்னர் பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சிக்குப் பின் கியூபா பொதுவுடைமைக் கொள்கையைத் தழுவியபோது நாடுகடத்தப்பட்ட அமாந்தோ யொரேந்தே (Amando Llorente) என்ற இயேசு சபைக் குரு எழுதிய நூலையும் திருத்தந்தை பிரான்சிசு, பிடெல் காஸ்ட்ரோவுக்குப் பரிசாகக் கொடுத்தார்.<ref>[http://www.catholicnewsagency.com/news/pope-francis-gifts-fidel-castro-with-copy-of-laudato-si-13006/ திருத்தந்தை பிரான்சிசும் பிடெல் காஸ்ட்ரோவும் பரிசுகள் பரிமாறல்]</ref>
 
பிடெல் காஸ்ட்ரோ தாம் எழுதிய “பிடெலும் சமயமும்” (“Fidel and Religion”) என்ற நூலை பிரான்சிசுக்குப் பரிசாகக் கொடுத்தார். அந்நூல், பிடெல் காஸ்ட்ரோ, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டை சந்தித்ததின் சுருக்கம் ஆகும். அந்நூலின் முகப்புப் பக்கத்தில் “திருத்தந்தை பிரான்சிசுக்கு, கியூபா நாட்டிற்கு ஒரு சகோதரரைப் போன்று அவர் வருகை தந்ததை முன்னிட்டு, கியூபா மக்களின் பாசமிகு வாழ்த்துகளோடு, பிடெல் வழங்கும் அன்புப் பரிசு” (“For Pope Francis, on the occasion of your fraternal visit to Cuba, with the admiration and respect of the Cuban people. Fidel.”)
 
அவானா நகரின் புரட்சி வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிசு திருப்பலி நிறைவேற்றினார். 200,000 மக்கள் குழுமியிருந்த வளாகத்தில் மறையுரை ஆற்றியபோது, ஏழை எளியோருக்கும் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டோருக்கும் ஆதரவு அளிப்பது தான் உண்மையான சமய நம்பிக்கை என்று பிரான்சிசு கூறினார். இளையோருக்கு உரையாற்றுகையில், “அன்புமிக்க இளையோரே, நீங்கள் ஒளிமயமானதோர் உலகம் உருவாகும் என்று கனவு காண வேண்டும்” என்று கூறினார். மேலும், “கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுநன்மையை முன்னிறுத்தி அனைவரும் ஒத்துழைக்க முடியும், ஒத்துழைக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். ”பண ஆசைக்கு அடிமைகள் ஆகிவிடாமலும், எளியோரை உதறித் தள்ளாமலும் நாம் செயல்பட வேண்டும்” என்றும் அவர் எடுத்துரைத்தார். <ref>[http://www.cnn.com/2015/09/20/world/pope-cuba-conflicts/ திருத்தந்தை இளையோருக்கு உரையாற்றுகிறார்]</ref>
 
அவானா நகரின் புரட்சி வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிசு மறையுரை ஆற்றியபோது, ஏழை எளியோருக்கும் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டோருக்கும் ஆதரவு அளிப்பது தான் உண்மையான சமய நம்பிக்கை என்று கூறினார். இளையோருக்கு உரையாற்றுகையில், “அன்புமிக்க இளையோரே, நீங்கள் ஒளிமயமானதோர் உலகம் உருவாகும் என்று கனவு காண வேண்டும்” என்று கூறினார். மேலும், “கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுநன்மையை முன்னிறுத்தி அனைவரும் ஒத்துழைக்க முடியும், ஒத்துழைக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். ”பண ஆசைக்கு அடிமைகள் ஆகிவிடாமலும், எளியோரை உதறித் தள்ளாமலும் நாம் செயல்பட வேண்டும்” என்றும் அவர் எடுத்துரைத்தார். <ref>[http://www.cnn.com/2015/09/20/world/pope-cuba-conflicts/ திருத்தந்தை இளையோருக்கு உரையாற்றுகிறார்]</ref>
==வெளி இணைப்புகள்==
*[http://www.vatican.va/holy_father/francesco/index.htm?openMenu=15 திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள் - வத்திக்கான் அலுவல்முறை இணையத்தளம்]