சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி தென்காசி சுப்பிரமணியன் பக்கம் அதிவீரராம பாண்டியர்-ஐ சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்க்கு... |
||
வரிசை 1:
{{
'''அதிவீரராம பாண்டியர்''' [[தென்காசிப் பாண்டியர்கள்|பிற்கால பாண்டிய மன்னர்களுள்]] ஒருவர். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்<ref name="கொக்கோகம்">{{cite book | title=அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும் | publisher=கற்பகம் புத்தகாலயம் | author=கவிஞர் பத்மதேவன் | pages=20|year=2010 | location=சென்னை}}</ref> ஏறக்குறைய 40 ஆண்டுகள் (1564–1604) ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இவர் ஒரு அரசர் என்பதோடன்றித் திறமையான தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். [[வடமொழி]]யிலும், [[தமிழ்|தமிழிலும்]] தோன்றிய, [[நளன்]] கதை கூறும் நூல்களைத் தழுவி [[நைடதம்]] என்னும் நூலை இவர் இயற்றினார். இது சிறந்த தமிழ் நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தவிர நீதிகளை எடுத்துக் கூறும் [[வெற்றி வேற்கை]] என்னும் நூலையும், [[காசி காண்டம்]], [[கூர்ம புராணம்]], [[மாக புராணம்]] ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார். இவற்றுடன் [[கொக்கோகம்]] எனப்படும் காமநூலையும் தமிழில் தந்துள்ளார்.<ref name="கொக்கோகம்"/>
மிகுந்த இறை பக்தி கொண்டவரான இவர், பல [[கோயில்]]களையும் கட்டுவித்துள்ளார். [[தென்காசி]]யில் இருக்கும் [[சிவன்]]கோயில் ஒன்றும் [[விஷ்ணு]] கோயில் ஒன்றும் இவற்றுள் அடங்குவனவாகும்.
இவருக்குச் '''சீவலமாறன்''' என்னும் பெயர் உண்டு என்பதை 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் [[சிதம்பரநாத கவி]] என்பவர் இவரைப்பற்றி இயற்றிய [[சீவலமாறன் கதை]] என்னும் நூலால் அறியமுடிகிறது.
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[புராணம் பாடிய தென்காசிப் பாண்டியர்]]
* [[கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்]]
* [[வெற்றி வேற்கை]]
== மேற்கோள் ==
<references/>
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
[[பகுப்பு:சைவச் சிற்றிலக்கிய ஆசிரியர்கள்]]
|