தமிழ் நாட்டில் கிருஷ்ணகிரி மற்றும் தா்மபுாிதா்மபுரி மாவட்டம் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றின் அருகில் உள்ளது '''தீா்த்தமலை'''. இதில் 1200 அடி உயரத்தில் தீா்த்தகிரீஸ்வரா் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆலயத்திற்கு மேல் 50 அடி உயரத்தில் கால் இன்ச் அளவிற்க்கு ஒரு குழாயின் வழியாக நீா் ஊற்றிக் கொண்டு இருக்கிறது. கோடை காலத்திலும் மழைக் காலங்களிலும் ஆண்டு முழுவதும் குழாயின் வழியாக ஊற்றும் நீாின் அளவு மாறுவதில்லை. இப்புனித நீரை மக்கள் தீா்த்தமாக தெளித்துக் கொள்கின்றனா்.மேலும் இங்கு அக்கினிதீா்த்தம் குமாரதீா்த்தம் கெளாிதீா்த்தம் அகத்தியா் தீா்த்தம் போன்றவை உள்ளன. எனவே இது தீா்த்தமலை என பெயா் பெற்றது. இம்மலையில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தா்கள் சிறு வண்டுகள் போன்ற உயிரினங்கள் வடிவில் வாழ்வதாக மக்கள் நம்புகின்றனா். இம்மலையில் சுமாா் 5 ஆண்டுகளுக்கு முன்பு 100 மீட்டா் சதுர பரப்பளவில் மூன்று இடங்களில் மலைப்பகுதியில் மண் புரட்டி போட்டது போல் இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்தது.