நாடு காட்டுப் பரவணிக் கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
"நாடு காட்டுப் பரவணிக் கல்வெட்டு" என்பதன் மைப்பிரதி ஒன்று [[லண்டன்]] மாநகர பொருட்காட்சிச் சாலையின் நூல் நிலையத்தில் உள்ளது<ref>No. OR 6616 r</ref>. இதுவரை அது அச்சில் வெளியானதாகத் தெரியவில்லை. கிழக்கிலங்கை பற்றிய நூல்களிலோ அல்லது அங்கு எழுதப்பட்ட இலக்கியங்களிலோ அதைப் பற்றிய குறிப்புக்கள் எதுவும் காணப்படவில்லை. அது பெரும்பாலும் '''நாடுகாட்டுப்பற்று''' பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களைக் கொண்டுள்ளது. ஏறத்தாள 150 ஆண்டுகளுக்கு முன்னர் மட்டக்களப்புப் பிரதேசம் ஏழு நிர்வாகப் பிரிவுகளாக அமைந்திருந்தது.<ref>A Monograph of the Batticaloa District of the eastern Province of Ceylon, S.O.Canagaratnam, Colombo-1921,P.10,78</ref> அவற்றுள் நாடுகாட்டுப் பற்று என்பதும் ஒன்றாகும். இப்பிரிவுகள் ஒவ்வொன்றும் வன்னியர் என்னும் சிற்றரசர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன.
▲===மொழிநடையும் கல்வெட்டின் காலமும்===
நாடுகாட்டு பரவெணிக் கல்வெட்டு ஒரு இலக்கிய வகையைச் சேர்ந்ததாக உள்ளது. மத்திய காலப் பகுதியிலே இந்த வகையான இலக்கியம் இலங்கைத் தமிழரிடையே, அதுவும் கிழக்கிலங்கை மற்றும் வன்னிப் பகுதிகளிலுமே பெரும் வளர்ச்சியடைந்திருந்தது. '''கோணேசர் கல்வெட்டு''', '''வையா''' என்னும் நூல்கள் கல்வெட்டு எனப்படும் இலக்கிய வகையிலே பிரசித்தம் பெற்று விளங்கின. திருகோணமலை, யாழ்ப்பாணம் (அடங்காப்பற்று) ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் வரலாறுகளை மேற்படி நூல்கள் கூறுவதுபோல், மட்டக்களப்புத் தென்பகுதியின் வரலாற்று அம்சங்களை இக்கல்வெட்டு பொருளாகக் கொண்டுள்ளது. நாடுகாட்டு பரவெணிக் கல்வெட்டு ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் பதிப்பிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மட்டக்களப்பு மான்மியத்தில் காணப்படும் சான்றுகள், நாடுகாட்டுப் பகுதியிலுள்ள மரபுவழிக் கதைகள், அங்குள்ள தொல்பொருள் சான்றுகள் ஆகியவைகளின் அடிப்படையில் நாடுகாட்டு பரவெணிக் கல்வெட்டிலுள்ள கதைகள் ஆராயப்படல் வேண்டும்.
|