பாண்டித்துரைத் தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 25:
}}
 
'''பாண்டித்துரைத் தேவர்''' ([[மார்ச் 3]]21, [[1867]] - [[டிசம்பர் 2]], [[1911]]; [[பாலவ நத்தம்]], தமிழ்நாடு) [[நான்காம் தமிழ்ச் சங்கம்]] அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார். இவர் ''[[செந்தமிழ் (இதழ்)]]'' என்னும் இதழ் வெளியிடவும், 'கப்பலோட்டிய தமிழர்' [[வ.உ.சி]] யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர்.
 
பாண்டித்துரைத் தேவர் பாலவநத்தம் ஜமிந்தார் என்றும், மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் என்றும், தலைமைப் புலவர் என்றும், செந்தமிழ்கலாவிநோதர் என்றும், செந்தமிழ் பரிபாலகர் என்றும், தமிழ் வளர்த்த வள்ளல் என்றும், பிரபுசிகாமணி என்றும், செந்தமிழ்ச் செம்மல் என்றும் அழைக்கப்பட்டவர். [[மூவேந்தர்|மூவேந்தரும்]] போய் முச்சங்கமும் போய்ப் பாவேந்தருங் குறைந்து பழைய நூலுரைகளும் மறைந்து படிப்பாருமின்றிக் கேட்பாருமின்றித் தமிழ்க் கல்வி மழுங்கிவரும் காலகட்டத்தில் மதுரை மாநகரில் தமிழ்ச்சங்கங் கூட்டியும், அருந்தமிழ் நூல்களை ஈட்டியும், படித்து வல்லவராவர்க்கு பரிசில் கொடுத்தும், செந்தமிழ் என்னும் மாசிக வாசிக பத்திரிகையை வெளிவிடுத்தும், இப்படிப் பலவாறான தமிழ்த் தொண்டினை திறம்படச் செய்த செந்தமிழ் ஆர்வலராவார்.<ref>[[குமாரசுவாமிப்புலவர்]], தமிழ் புலவர் சரித்திரம், 1914. பக். 210</ref>.
"https://ta.wikipedia.org/wiki/பாண்டித்துரைத்_தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது