திருவிசநல்லூர் யோகநந்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 72:
இங்கு வாழ்ந்து வந்த சிவனடியார் ஒருவரின் உயிரைப் பறிக்க எமதர்மன் தன் எருமை வாகனத்தின் மீதேறி வந்தான். நந்திதேவர் எமனை எதிர்கொண்டு விரட்டி அடித்தார். அதன்பின், சிவனடியாரின் உயிரைப் பறிக்க வந்த தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு எமதர்மனே சிவயோகிநாதரையும், நந்திதேவரையும் வணங்கினான் என்பது புராணம். எனவே இந்த இறைவனை வணங்கினால் மரண பயம் விலகும்.
 
மகான் ஸ்ரீதர ஐயாவாள் அவதரித்து, பல அற்புதங்களை நிகழ்த்திய தலம் திருவிசநல்லூர். தன் இல்லத்து சிராத்த தினத்தன்று உணவளிப்பதற்காக அந்தணர்களை எதிர்பார்த்து ஸ்ரீதர ஐயாவாள் தன் வீட்டு வாசலில் காத்திருக்கிறார். அப்போது தாழ்த்தப்பட்டவர் ஒருவர் அவர் இல்லம் வந்து பசியால் துடிப்பதாக சொன்னார். உடனே அந்தணர்கள் உண்பதற்காக தயாராக வைத்திருந்த உணவை அந்த தாழ்த்தப்பட்டவருக்கு அளித்து மகிழ்ந்தார். இதனைக் கண்டு வெகுண்டனர் அந்த அக்கிரஹாரத்தில் வசித்த அந்தணர்கள். 'நீ தூய்மையானவன் என்பதை எங்களுக்கு நிரூபித்தால் தான் இங்கே இருக்க வேண்டும். இல்லாவிட்டால், கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும். நீ தூய்மையானவன் என்பதை நிரூபிக்க விரும்பினால் உடனே, கங்கை நதியை இங்கே வரவழைத்து அதில் நீ நீராட வேண்டும். இதுதான் பரிகாரம்' என்று கட்டளை இட்டனர். 'ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம்' என்பதே ஐயாவாளின் கொள்கை. பக்தியில் சிறந்த ஸ்ரீதர ஐயாவாள் இறைவனை உருகி வேண்ட, அவர் வீட்டுக் கிணற்றில் கங்கை கொப்பளித்து வந்தது. கிணற்றின் நீர்மட்டம் விறுவிறுவென ஏறி, வழிந்து, அந்தத் தெரு முழுதும் கங்கை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்பொழுது தான் அந்த தெருவில் வாழ்ந்த அந்தணர்கள் ஐயாவாளின் மகிமையை அறிந்தனர். மன்னிப்பும் கேட்டனர். இப்பொழுதும் கார்த்திகை அமாவசை தினத்தில் ஐயாவாள் வசித்த வீட்டின் கிணற்றில் கங்கை எழுந்தருளுகிறாள். ஏராளமான பக்தர்கள் அன்றைய தினம் அங்கு சென்று நீராடி புண்ணியம் பெறுகின்றனர்.
 
==இறைவன், இறைவி==