திராவிடக் கட்டடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி துப்புரவு
வரிசை 1:
{{unreferenced}}
இந்தியக் [[கட்டிடக்கலை]] வரலாற்றில் '''திராவிடக் கட்டிடக்கலை''' முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் ஆறாம் நூற்றாண்டளவில் தற்போதைய [[கர்நாடகம்|கர்நாடக]]ப் பகுதிகளில் சாளுக்கிய ஆட்சியின் கீழ், அக்கால இந்தியக் கட்டிடக்கலைப் பாணியிலிருந்து விலகி, புதிய திராவிடக் கட்டிடக்கலைப் பாணி முகம் காட்டத் தொடங்கியது. எனினும், இப் பாணியின் மூலக்கருவை [[குப்தர்]]காலப் [[பௌத்த கட்டிடக்கலை|பௌத்த கட்டிடங்கள்]] சிலவற்றில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தப் பாணியை ஏழாம் நூற்றாண்டளவில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]]ப் பகுதிகளிலும் காணக்கூடியதாக இருந்தது. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே [[பல்லவர்|பல்லவ]] அரசர்களின் கீழும் பின்னர் [[சோழர்]], [[பாண்டியர்]], [[விஜயநகரம்]], [[நாயக்கர்]] ஆகிய ஆட்சிகளின் கீழும் தொடர்ந்து வளர்ந்து உயர்நிலை அடைந்தது.
 
திராவிடக் கட்டிடக்கலையைப் பல துணைப் பிரிவுகளாகப் பிரித்து ஆராய்வது வழக்கம். பொதுவாகக் கால அடிப்படையில், அந்தந்த காலங்களில் முதன்மை பெற்றிருந்த அரசுகளின் தொடர்பில் இத் துணைப் பிரிவுகளை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியக் கட்டிடக்கலை (Indian Archtecture) என்னும் ஆங்கில நூலில் [[பேர்சி பிறவுன்]] என்பார் பின்வருமாறு திராவிடக் கட்டிடக்கலையைத் துணைப்பிரிவுகளாக வகுத்துள்ளார்.
 
[[பல்லவர் காலக் கட்டிடக்கலை|பல்லவர் காலம்]] - (கி.பி 600 - கி.பி 900), [[சோழர் காலக் கட்டிடக்கலை|சோழர் காலம்]] - (கி.பி 900 - கி.பி 1150), [[பாண்டியர் காலக் கட்டிடக்கலை|பாண்டியர் காலம்]] - (கி.பி 1100 - கி.பி 1350), [[விஜயநகரக் கட்டிடக்கலை|விஜயநகரக் காலம்]] - (கி.பி 1350 - கி.பி 1565), [[நாயக்கர் காலக் கட்டிடக்கலை|நாயக்கர் காலம்]] - (கி.பி 1600 - )
 
== பல்லவர் காலம் ==
வரிசை 16:
* தனிக்கட்டுரை: [[சோழர் காலக் கட்டிடக்கலை]]
[[படிமம்:Thanjavur temple.jpg|thumb|150px|தஞ்சை பெரிய கோயில்]]
[[தமிழகம்|தமிழக]]த்தில் சோழராட்சி முன்னணிக்கு வந்த முற்பகுதியில் (10 ஆம் நூற்றாண்டு) மிகுதியான அளவில் [[கோயில்]]கள் கட்டப்படதாகத் தெரியவில்லை; கட்டப்பட்டவையும் அளவிற் சிறியவையே. இக் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களுக்கு எடுத்துக்காட்டாகத் [[திருக்கட்டளை]]யிலுள்ள சுந்தரேஸ்வரர் கோயில், [[கொடும்பாளூர்|கொடும்பாளூரி]]லுள்ள மூவர் கோயில், திருமயம், கண்ணனூரிலுள்ள பாலசுப்பிரமணியர் கோயில், [[திருச்சிராப்பள்ளி]], சிறீனிவாசநல்லூரில் கட்டப்பட்ட குரங்கநாதர் கோயில் என்பவற்றைக் கூறலாம்.
 
சோழராட்சியின் தொடக்கக்காலக் கோயில்களில் பல கூறுகளில் புதிய பாணிகள் தென்பட்டபோதும், [[பல்லவர்]] காலக் [[கட்டிடக்கலை]] கூறுகளும் முற்றாக மறைந்து விடவில்லை. இக்காலக் கட்டிடங்கள் முன்னர் கூறியது போல் அளவிற் சிறியனவாக இருந்தாலும், பல்லவர் கட்டிடங்களோடு ஒப்பிடுகையில் முழுமை பெற்றவையாகக் காணப்படுகின்றன.
 
சோழராட்சியின் பிற்பகுதி திராவிடக் கட்டிடக்கலையின் பொற்காலம் எனலாம். [[இராஜராஜ சோழன்]] காலத்தில் [[சோழர்]]கள் மிகவும் பலம் பெற்று விளங்கினர். அவர்களுடைய நாடு பரந்து விரிந்து இருந்தது. [[இந்தியா|இந்திய]] நாட்டுக்கு வெளியேயும் அவர்களுடைய ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலம். இந்த அதிகார பலத்தினதும், செல்வ வளத்தினதும் பின்னணியிலேயே தஞ்சைப் பெரிய கோயில் என அழைக்கப்படும் [[பிருஹதீஸ்வரர் கோயில்]] கட்டப்பட்டது.
 
== பாண்டியர் காலம் ==
* தனிக் கட்டுரை: [[பாண்டியர் காலக் கட்டிடக்கலை]]
 
== விஜய நகரக் காலம் ==
* தனிக் கட்டுரை: [[விஜயநகரக் காலக் கட்டிடக்கலை]]
 
== நாயக்கர் காலம் ==
* தனிக் கட்டுரை: [[நாயக்கர் காலக் கட்டிடக்கலை]]
[[Image:Padmanabhapuram Palace.JPG|thumb|240px|right|பத்மநாபபுரம் அரண்மனை(கி.பி. 1601)]]
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* தனிக் கட்டுரை: [[பாண்டியர் காலக் கட்டிடக்கலை]]
 
* தனிக் கட்டுரை: [[விஜயநகரக் காலக் கட்டிடக்கலை]]
* தனிக் கட்டுரை: [[நாயக்கர் காலக் கட்டிடக்கலை]]
* [[திராவிடக் கட்டிடக்கலை ஒழுங்கு]]
* [[இந்தியக் கட்டிடக்கலை]]
* [[வட இந்தியக் கட்டிடக்கலை]]
 
== வெளியிணைப்புகள் ==
 
[[பகுப்பு:கட்டிடக்கலை]]
"https://ta.wikipedia.org/wiki/திராவிடக்_கட்டடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது