எரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
"{{mergeto|ஹீரா}} {{Infobox deity | type = கிரேக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
{{Infobox deity
▲{{mergeto|ஏரா}}
| type = கிரேக்கம்
| name = ஏரா
| image = Hera Campana Louvre Ma2283.jpg
| image_size =
| alt =
| caption =
| god_of = கடவுள்களின் அரசி<br/>திருமணம், பெண்கள், குழந்தை பிறப்பு மற்றும் குடும்பம் ஆகியவற்றின் கடவுள்
| abode = ஒலிம்பிய மலைச்சிகரம்
| symbol = மாதுளைப்பழம், மயில் இறகு, மகுடம், பசு, குவளை, தாமரை, குயில், சிங்கம்,
சிறுத்தை, செங்கோல், சிங்காதனம்
| consort = [[சியுசு]]
| parents = குரோனசு மற்றும் ரியா
| siblings = பொசைடன், ஏட்சு, டிமெடர், எசுடியா மற்றும் சியுசு
| children = ஏரிசு, என்யோ, எபே, எய்லெய்தையா, எஃபீசுடசு மற்றும் எரிசு
| mount = மயில்கள் ஓட்டும் தேர்
| Roman_equivalent = சூனோ
}}
'''ஏரா''' [[கிரேக்க மொழி|கிரேக்கம்]] {{lang|grc|Ἥρᾱ}}என்பவர் கிரேக்க புராணக் கதைகளின்படி சியுசின் மனைவியும் அவரது சகோதரியும் ஆவார். இவர் பெண்கள் மற்றும் திருமணம் ஆகியவற்றின் கடவுளாக இருக்கிறார். பசு, சிங்கம் மற்றும் மயில் ஏராவிற்கு புனிதமானவையாக கருதப்படுகிறது. இவரது பெற்றோர் குரோனசு மற்றும் ரியா. தன் கணவர் சியுசின் பல காதலிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் மேல் பொறாமை குணம் கொண்டவராக ஏரா அறியப்படுகிறார்.
[[Image:Temple of Hera - Agrigento - Italy 2015.JPG|thumb||250px|அக்ரிகென்டோவில் உள்ள மாக்னா க்ரேசியாவில் இருக்கும் ஏராவின் கோவில்]]
[[Image:Carracci - Jupiter et Junon.jpeg|thumb|250px|சூபிடர் மற்றும் சூனோ]]
==எராகல்சு==
ஏரா எராகல்சின் சித்தியும் அவரது பகைவரும் ஆவார். ஏனெனில் எராகல்சி சியுசு மற்றும் அல்கிமியின் மகன் ஆவார். எராகில்சு பிறப்பதை தடுக்க அல்கிமியின் கால்களை முடிச்சுகளாக மாற்றினார் ஏரா. ஆனால் குழந்தை ஏற்கனவே பிறந்துவிட்டது.
எராகில்சு குழந்தையாக இருந்தபோது அவரை அழிக்க ஏரா இரண்டு பாம்புகளை அனுப்பினார். ஆனால் ஏராகில்சு அவற்றை விளையாட்டு பொம்மைகள் போல பிடித்து விளையாடினார்.
சியுசு ஏராவை ஏமாற்றி எராகில்சுக்கு தாய்ப்பால் புகட்ட வைத்தார். பிறகு உண்மை அறிந்த ஏரா எராகில்சை தன் மார்பில் இருந்து தள்ளி விட்டார். பிறகு ஏராவின் மார்பில் இருந்து சிந்திய பால் வானத்தில் படர்ந்தது. அதுவே இன்றைய பால்வீதி மண்டலம் ஆகும்.
சில புராணங்களில் எராகில்சு ஏராவை கற்பழிக்க முயன்ற போஃபிரியன் என்ற அரக்கனிடம் இருந்து அவரை காப்பாற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு பரிசாக ஏரா தன் மகள் ஏபேயை மணமகளாக எராகில்சுக்கு கொடுத்தார்.
[[Image:Herakles strangling snakes Louvre G192.jpg|thumb|250px|ஏரா அனுப்பிய பாம்புகளுடன் விளையாடும் எராகில்சு]]
[[File:Jacopo Tintoretto - The Origin of the Milky Way - Yorck Project.jpg|thumb|250px|பால்வீதி மண்டலம் உருவாக்கம்]]
==எக்கோ==
கவிஞர் ஓவிட் எழுதிய மெடாமோர்போசசில் வரும் ஒரு கதையில் எக்கோ என்பவர் சியுசிடமிருந்து ஏராவை பிரிக்கும் வேலையை செய்து வந்தார். இதனை அறிந்தவுடன் ஏராஇனி மற்றவர்களின் வார்த்தைகளை எக்கோ எதிரொலிக்குமாறு சாபமிட்டார். இதன் மூலம் தான் எதிரொலி என்பதற்கு ஆங்கில சொல்லான எகோ என்பது வந்தது.
==லெடோ, அப்போலோ மற்றும் ஆர்டமீசு==
லெடோவின் வயிற்றில் வளர்வது சியுசின் குழந்தை என்று ஏரா அறிந்தவுடன், லெடோவிற்கு நிலத்திலோ அல்லது தீவிலோ பிரசவம் நடக்காது என சாபமிட்டார். பிறகு லெடோவின் மேல் கருணை கொண்ட கடல் கடவுள் பொசைடன், அவளுக்கு நிலமோ தீவோ அல்லாத மிதக்கும் தீவான டிலோசுக்கு வழிகாட்டினார். அங்கு லெடோவிற்கு இரட்டை குழந்தைகளான அப்போலோ மற்றும் ஆர்டமீசு பிறந்தனர். பிறகு அந்த தீவு அப்போலோவிற்கு புனித இடமானது.
வேறு ஒரு கதையில் ஏரா லெடோவின் பிரசவத்தை தடுக்க குழந்தை பிறப்பு கடவுளான எய்லெய்தியாவை கடத்தியதாக கூறப்படுகிறது. பிறகு டிலோசு தீவில் லெடோவிற்கு முதலில் ஆர்டமீசு பிறந்தார். பிறகு அவரே அப்போலோவின் பிறப்பிற்கும் உதவியதாக கூறப்படுகிறது.
==செமிலி மற்றும் டயோனைசசு==
செமிலியின் வயிற்றில் வளர்வது சியுசின் குழந்தை என்று அறிந்த ஏரா ஒரு செவிலியரின் உருவம் தாங்கி வந்தார். செமிலியிடம் சியுசின் உண்மையான உருவத்தை காணுமாறு கூறினார். அவர் கட்டாயப்படுத்தியதால் சியுசு தன் உருவத்தை கா்பித்தார். அப்போது வெளிப்பட்ட இடியும் மின்னலும் செமிலியை அழித்துவிட்டது. பிறகு செமிலியின் பிறக்காத குழந்தையான டயோனைசசை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார் சியுசு.
மற்றொரு கதையில் டயோனைசசு என்பவர் சியுசு மற்றும் டிமடர் அல்லது பெர்சிஃபோனின் மகனாக கருதப்படுகிறார். ஏரா டைட்டன்களை அனுப்பி அந்த குழந்தையை துண்டு துண்டாக நறுக்கி வீசினார். அந்த குழந்தையின் பெயர் சாக்ரியுசு. இதற்கு துண்டுகளாக வெட்டப்பட்டவன் என்று பொருள். அவரது இதயத்தை சியுசு காப்பாற்றினார்.
பிறகு இறந்து போன செமிலியின் குழந்தை டயோனைசசின் உடலில் அந்த இதயத்தை பொருத்தி அவனை உயிர்ப்பெறச் செய்தார். சில கதைகளில் சியுசு அந்த இதயத்தை செமிலியிடம் கொடுத்து உண்ணும்படி கூறியதாகவும் அதன் மூலம் அவள் கர்ப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த ஏரா செமிலியிடம் சியுசின் உண்மையான உருவத்தை காணும்படி கூறினார். அதைக் கண்டவுடன் செமிலி இறந்து போனாள். பிறகு டயோனைசசு தன் தாய் செமிலியை பாதாள உலகில் இருந்து மீட்டு வந்து அவரை ஒளிம்பிய மலையில் வாழ வைத்ததாகக் கூறப்படுகிறது.
|