இரண்டாம் உலகப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி 100.12.4.211ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 5:
செப்டம்பர் 1, 1939ல் [[நாசி ஜெர்மனி]]யின் [[போலந்து]] [[போலந்து படையெடுப்பு|படையெடுப்புடன்]] இப்போர் துவங்கியதாகப் பொதுவாக வரலாற்றாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு புறம் [[பிரிட்டன்]] அதன் [[பிரித்தானியப் பேரரசு|பேரரசில்]] இடம் பெற்றிருந்த நாடுகள் [[பிரான்சு]] ஆகியவை நேச நாட்டு அணியிலிருந்தன. மறுபுறம் [[நாசி ஜெர்மனி]] மற்றும் [[பாசிசம்|பாசிச]] [[இத்தாலி]] ஆகியவை சேர்ந்து அச்சு அணியை உருவாக்கின. 1939-41ல் அச்சுப் படைகள் [[மேற்கு ஐரோப்பா]] முழுவதையும் கைப்பற்றின. பிரிட்டன் மட்டும் அவற்றின் பிடியிலிருந்து தப்பியது. பின் [[வடக்கு ஆப்பிரிக்கா]]வைக் கைப்பற்ற அச்சுப் படைகள் முயன்றன. ஜூன் 1941ல் அச்சுப் படைகள் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] மீது [[பர்பரோசா நடவடிக்கை|படையெடுத்ததால்]] சோவியத் ஒன்றியம் நேச நாட்டு அணியில் இணைந்தது. 1930களின் துவக்கத்திலிருந்து [[சீனா]] மீது போர் தொடுத்து அதன் பல பகுதிகளைக் ஆக்கிரமித்திருந்த [[சப்பானியப் பேரரசு]]ம் அச்சு அணியில் இணைந்தது.
 
டிசம்பர் 1941ல் [[ஐக்கிய அமெரிக்கா]]வைத் தாக்கியதன் மூலம் சப்பான் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது. அதுவரை நேச நாடுகளுக்குத் தளவாட வழங்கலை மட்டும் செய்து வந்த அமெரிக்காவும் போரில் நேரடியாக ஈடுபட்டது. சப்பானியப் படைகள் விரைவில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி [[இலத்தீன்இந்தியா]]வின் கிழக்கெல்லை வரை முன்னேறி விட்டன. 1942 வரை அச்சு நாடுகளுக்குச் சாதகாமாக இருந்த போர் நிலவரம் அவ்வாண்டு நேரெதிரானது. ஐரோப்பாவின் கிழக்கு முனையில் அச்சு நாட்டு முன்னேற்றம் சோவியத் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. வடக்கு ஆப்பிரிக்காவிலும் அச்சுப் படைகள் முறியடிக்கப்பட்டு பின்வாங்கின. [[பசிபிக் பெருங்கடல்]] பகுதியில் அமெரிக்கப் படைகள் நேச நாட்டு படைகள் இழந்த பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றத் தொடங்கின. 1943ல் [[இத்தாலி]] மீது நேச நாட்டுப் படைகள் படையெடுத்தன; விரைவில் அந்நாடு சரணடைந்தது. 1944ல் மேற்கு ஐரோப்பாவை மீட்க நேச நாட்டுப் படைகள் கடல் வழியாகப் [[ஓவர்லார்ட் நடவடிக்கை|படையெடுத்தன]]. கிழக்கில் சோவியத் படைகளாலும் மேற்கில் பிரிட்டானிய, அமெரிக்க, பிரெஞ்சுப் படைகளாலும் தாக்கப்பட்ட ஜெர்மனி ஈராண்டுகளுக்குள்ளாகத் தோற்கடிக்கப்பட்டது. மே 1945ல் ஜெர்மனியின் சரணடைவுடன் [[ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு|ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர்]] முடிவடைந்தது. 1943-45 காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றிச் சப்பானியத் தாயகத் தீவுகளை நோக்கி முன்னேறிய அமெரிக்கா, ஆகஸ்ட் 1945ல் சப்பானின் [[ஹிரோஷிமா]] மற்றும் [[நாகசாகி]] நகரங்கள்மீது [[அணு குண்டு]]களை வீசியது. இதன் விளைவாகச் சப்பான் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.
 
இப்போரின் விளைவாக உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய பேரரசுகள் தங்கள் வல்லமையை இழந்தன; [[ஆப்பிரிக்கா]] மற்றும் [[ஆசியா]]வில் [[காலனிமயமழித்தல்]] தொடங்கியது. அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகின் புதிய [[வல்லரசு]]களாகின; அவற்றுக்கிடையே [[பனிப்போர்]] துவங்கியது. உலக அமைதிக்காகச் செயல்பட [[ஐக்கிய நாடுகள்]] அமைப்பு உருவாக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_உலகப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது