யுகாந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added one link
No edit summary
வரிசை 1:
'''ஜுகாந்தர்''' அல்லது '''யுகாந்தர்''' ([[வங்காள மொழி]]: যুগান্তর) [[இந்திய விடுதலைப் போராட்டம்|இந்திய விடுதலைப் போராட்ட]] காலத்தில் [[வங்காளம்|வங்காளத்தில்]] செயல்பட்ட ஒரு புரட்சி இயக்கம். ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தருவதே இதன் குறிக்கோள். [[அனுசீலன் சமித்தி]] என்ற புரட்சி அமைப்பிலிருந்து பிரிந்து 1906ஆம் ஆண்டு உருவானது. [[அரவிந்தர்]], அவரது சகோதரர் பாரின் கோஷ், [[பூபேந்திரநாத் தத்தர்]], ராஜா சுபோத் மாலிக் ஆகியோர் இதனைத் தொடங்கினர். இவ்வமைப்பும் அனுசீலன் சமித்தியும் புறநகர் உடற்பயிற்சி கழகங்கள் என்ற போர்வையில் [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானிய அரசு]]க்கு எதிராக ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டன. [[அலிப்பூர் வெடிகுண்டு சதி வழக்கு]], [[இந்து-ஜெர்மானிய சதி]] ஆகிய புரட்சி நடவடிக்கைகளில் யுகாந்தர் ஈடுபட்டது. இதன் பல உறுப்பினர்கள் காலனிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் இவ்வியக்கம் முடக்கப்பட்டு சிறு குழுக்களாகப் பிளவுண்டது. 1920ஆம் ஆண்டு யுகாந்தர் உறுப்பினர்கள் விடுதலையை அடைய வன்முறைப் பாதையைக் கைவிட்டனர். [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] இணைந்து [[ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கத்தில்]] ஈடுபட்டனர். 1930களில் மீண்டும் சில ஆண்டுகள் வன்முறை வழிகளில் ஈடுப்பட்டு பின் 1938 இல் காங்கிரசில் இணைந்து விட்டனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/யுகாந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது